என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "chennai Airport Cargo"
- எதிர்கால திட்டங்கள் குறித்து துறைமுக பொறுப்பு கழக தலைவர் விளக்கம்.
- மீனம்பாக்கம் விமான சரக்கு முனையத்தில் சுதந்திர தின விழா.
சென்னை துறைமுகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தண்டையார் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக வீட்டு வசதி காலனியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில், துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பானிவால் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது பேசிய அவர், துறைமுகத்தின் எதிர்கால திட்டங்கள், சாதனைகள், ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கினார். கப்பல் போக்குவரத்துத்துறை துறைமுகத்தின் முன்னேற்றத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை சார்பில், மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்கக வளாகத்தில் சுதந்திர தின விழா, இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் கே ஆர் உதயபாஸ்கர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அணி வகுப்பு மரியாதையையும், முதன்மை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.