என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China Army"

    • தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலையிடுவதை சீனா எதிர்த்து வருகிறது.
    • சீனாவின் அத்துமீறலை கண்காணித்து வருகிறோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

    தைபே நகரம்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது.

    ஆனால், தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

    தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.

    ஆனால் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தைவான் அதனை மறுத்து வருகிறது.

    இதற்கிடையே தைவான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.

    இந்நிலையில், தைவான் கடற்பகுதியில் 11 போர்க்கப்பல் மற்றும் 7 விமானங்கள் தைவான் எல்லையைச் சுற்றி வளைத்தன.

    சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #IndiaBorder #IndianArmy #ChinaArmy
    புதுடெல்லி:

    இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 2 மாதமாக பதட்டம் நீடித்தது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு பதட்டம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.



    அதன்பின்னர் பிரிகேடியர் அளவிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகள் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதேபோல் கடந்த ஜூலை மாதமும் இந்திய பகுதிக்குள்  சீன ராணுவம் ஊடுருவியதாகவும், பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தியதையடுத்து சீன வீரர்கள் திரும்பி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சனைக்குரிய 23 இடங்களில் டெம்சாக் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #IndiaBorder #IndianArmy #ChinaArmy

    ×