search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egmore Museum"

    • எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எழும்பூர் அருங்காட்சியகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது.
    • எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    சென்னை:

    சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி எழும்பூர் அருங்காட்சியகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது.

    மேலும் இங்கு பாதுகாப்பு உபகரணங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    எழும்பூரில் அருங்காட்சியகத்தை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதன்படி அருங்காட்சியகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பதற்காக விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் ரூ.62 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும் மீதமுள்ள பணிகளை ரூ.2.38 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளவும் அந்த கடிதத்தில் கூறி இருந்தார். அதன்படி மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் எழும்பூர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படுகிறது.

    மேலும் எழும்பூர் அருங்காட்சியகத்தின் வாடகை மற்றும் இதர செலவினங்களை மாற்றியமைப்பதற்கான முன் மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை அரசு பிறப்பித்து இருக்கிறது.

    இந்த நிலையில் எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் அருங்காட்சியகம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
      • அருங்காட்சியகத்தில் உள்ள கலையரங்கை மேம்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

      சென்னை:

      சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

      சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்துக்கு அடுத்த படியாக இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியமாகும்.

      16.25 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் 6 கலைமிகு கட்டிடங்களுடன் அமைந்துள்ளது. இங்குள்ள 46 காட்சி கூடங்களில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளை சார்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

      மேலும் இயற்கை சார் வரலாறு, பண்பாடு சார் வரலாறு ஆகிய இரு துறைகளை சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

      இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலையரங்கை மேம்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

      அதன்படி இங்குள்ள கலையரங்கத்தின் இருக்கைகளை மாற்றி புதிய இருக்கைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பையும் பொதுணப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

      • கோடை விடுமுறையையொட்டி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குவிந்து வருகிறார்கள்.
      • பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவற்றை மிகவும் வியப்பாக உள்ளது

      சென்னை:

      கோடை விடுமுறையையொட்டி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குவிந்து வருகிறார்கள்.

      சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் பழமைவாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் (மியூசியம்) செயல்பட்டு வருகிறது.

      இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியகமாக திகழ்ந்து வருகிறது. 1851-ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது ஆகும்.கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் முதல் இடத்தில் உள்ளது. கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் இன்னும் பல தலைசிறந்த களஞ்சியமான சென்னை அருங்காட்சியகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

      இங்கு நமது முன்னோர்களின்வாழ்வியல்,தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

      46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டடங்கள் உள்ளன. தலைமைக் கட்டடத்தின் கீழ்தளத்தில் சிற்பங்கள்,பழங்கால கல்சிலைகள்,விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் பற்றிய காட்சிக்கூடங்கள் உள்ளன.

      பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவற்றை மிகவும் வியப்பாக உள்ளது. மேலும் டைனோசர் போன்ற எலும்புக்கூடு பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது. தினமும் காலை 9-30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. பெரியவர்களுக்கு ரூ.15,சிறுவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை தினமாகும்.தற்போது கோடை விடுமுறையை யொட்டி அருங்காட்சியகத்தை பார்வையிட ஏராளமான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள், மாணவர்கள்,வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகிறார்கள்.

      அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்.மூலம் ஆராய்ச்சி மாணவர்கள் அருங்காட்சியத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

      அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பெரிய டிஜிட்டல் எல்.இ.டி, மூலம் விரிவாக பார்வையாளர்களுக்கு விளக்கம் செய்தும்காண்பிக்கப்படுகிறது.

      இதன் மூலம் அருங்காட்சியகம் பற்றிய முழு விபரங்கள், தகவல்கள் எளிதில் பார்வையாளர்கள் மனதில் பதிவாகிறது.

      ×