என் மலர்
நீங்கள் தேடியது "Gujarat titans"
- மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஒரு மறைமுக பதிவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது.
அந்த மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? எந்த அணிகள் பலமாக திகழும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்ற குஜராத் டைட்டம்ஸ் அணி கடந்த ஆண்டு சுப்மன் கில்லை அந்த அணியின் கேப்டனாக நீடிக்க வைத்தது.
இந்நிலையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு மறைமுக குறிப்பில், எ நியூ ஸ்லேட் (A New Slate), எ நியூ ஸ்டோரி (A New Story) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர்கள் ஏதோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது தெரிய வந்தது.
A clean slate. A new story. ✨#AavaDe pic.twitter.com/fNt319mJlP
— Gujarat Titans (@gujarat_titans) January 1, 2025
அதிலும் குறிப்பாக அந்த பதிவிற்கு கீழ் ரஷீத் கானின் புகைப்படத்தையும் அவர்கள் பதிவிட்டுள்ளதால் சுப்மன் கில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஏனெனில் சுப்பன் கில்லை தக்க வைத்த விலையை விட கூடுதல் விலை கொடுத்து அந்த அணி ரஷீத் கானை தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக ரஷீத் கான் அவர்களிடம் ஏதாவது நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை மட்டுமே கேப்டன்சி செய்துள்ள ரஷீத் கான் அந்த இரண்டு போட்டிகளிலுமே கேப்டனாக தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோன்று அந்த இரண்டு முறையும் அவர் கேப்டனாக இருந்ததும் குஜராத் அணிக்காக மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
ஒட்டுமொத்தமாகவே சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் பிரான்ச்சைசி டி20 கிரிக்கெட்டில் 67 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள ரஷித் கான் 34 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
- பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடி ரூபாய்க்கு குஜராத் வாங்கியது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. 2023 ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறவிட்டு ரன்னர் அப் ஆனது.
அறிமுகமான முதல் 2 ஐபிஎல் தொடரிலும் பைனல் வரை சென்ற குஜராத் அணி கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. முதல் 2 ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா கடந்த சீசனில் மும்பை அணிக்கு சென்றதால் குஜராத் அணியை கடந்த சீசனில் சுப்மன் கில் வழிநடத்தினார்.
இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக விளையாட என்ற முனைப்போடு இருக்கும் குஜராத் அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மன் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி) ஆகிய 5 வீரர்களை 51 கோடி கொடுத்து தக்க வைத்தது.
கையில் 69 கோடியுடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அடுத்ததாக பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடிக்கும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை 10.75 கோடிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை 9.50 கோடிக்கும் வாங்கியது.
வரும் ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் உடன் இணைந்து சுப்மன் கில் களமிறங்குவார். மிடில் ஆர்டரில் விளையாட சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
ரஷித் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்சீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் குஜராத் அணியில் உள்ளனர்.
அதனால் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
25 பேர் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி:
1. ரஷித் கான், 2. சுப்மன் கில், 3. சாய் சுதர்சன், 4. ராகுல் தெவாடியா, 5. ஷாருக் கான், 6. ககிசோ ரபாடா, 7. ஜோஸ் பட்லர், 8. முகமது சிராஜ், 9. பிரசித் கிருஷ்ணா, 10. நிஷாந்த் சிந்து, 11. மஹிபால் லோம்ரோர், 12. குமார் குஷாக்ரா, 13. அனுஜ் ராவத், 14. மானவ் சுதார், 15. வாஷிங்டன் சுந்தர், 16. ஜெரால்ட் கோட்சீ , 17. குர்னூர் ப்ரார், `18. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், 19. சாய் கிஷோர், 20. இஷாந்த் சர்மா, 21. ஜெயந்த் யாதவ், 22. க்ளென் பிலிப்ஸ், 23. கரீம் ஜனத், 24. குல்வந்த் கெஜ்ரோலியா. 25. அர்ஷத் கான்
Aapda Titans, Aapdo home, Aapdo pride ?#AavaDe | #TATAIPLAuction | #TATAIPL pic.twitter.com/ld2N0qWCpm
— Gujarat Titans (@gujarat_titans) November 25, 2024
- ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
- கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. வாஷிங்டன் சுந்தரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.
- பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.
ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் துணை தலைமை பயிற்சியாளராக பார்த்திவ் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்தமுறை கோப்பையை வென்று அசத்தியது.
புதிய பேட்டிங் மற்றும் துணை தலைமை பயிற்சியாளர் தொடர்பான அறிவிப்பை குஜராத் அணி அறிக்கையாக வெளியிட்டது. அதில், "வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு டைட்டன்ஸ் தயாராகி வரும் நிலையில், பேட்டிங் நுட்பங்கள், உத்திகள் குறித்த பார்த்திவின் நுண்ணறிவு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்."
"அவரது கூர்மையான கிரிக்கெட் திறன், இளம் திறமைகளுக்கு வழிகாட்டும். இதோடு பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்தி, வீரர்களின் மேம்பாடு, செயல்திறனுக்கு அவர் பங்களிப்பார்," என்று குறிப்பிட்டுள்ளது.
குஜராத் அணியில் கேரி கிர்ஸ்டெனுக்கு மாற்றாக பார்த்திவ் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேரி கிர்ஸ்டென் குஜராத் அணியில் இருந்து விலகி பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.
- 2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார்.
- 2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணி யில் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.
இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சுப்மன்கில் விலகுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
அகமதாபாத் நகரை மையமாக கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு அறிமுகம் ஆன ஹர்திக்பாண்ட்யா தலைமையில் அறிமுக போட்டியில் அந்த அணி கோப்பையை வென்றது. 2023-ல் 2-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.லில் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு தாவினார்.
இதனால் சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் குஜராத் அணி 'லீக்' சுற்றோடு வெளியேறியது.
2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார். குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொள்கிறது. இதே போல ரஷீத்கானும் அந்த அணியில் தக்க வைக்கப்படுகிறார்.
இதற்கிடையே சுப்மன்கில் ஏலத்தில் வருவதற்கு மிக முக்கியமான அணிகள் விரும்புவதாக குஜராத் அணி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் குஜராத் அணியில் இருந்து வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே லக்னோ அணி நிர்வாகம் நிக்கோலஸ் பூரண், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மோஷின்கான், பதோனி ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 5 வீரர்களுக்கும் மொத்தம் ரூ.51 கோடி செலவழிக்கும் என்று தெரிகிறது.
2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுலை தக்க வைத்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரு வேளை அவர் தேவைப்பட்டால் ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
- சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பார்த்திவ் படேல் பணியாற்றி உள்ளார்.
மும்பை:
ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏராளமான அணிகளில் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். லக்னோ, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் பயிற்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2022-ம் ஆண்டு அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த கேரி கிர்ஸ்டன், தற்போது பாகிஸ்தான் அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரது இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கொண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பார்த்திவ் படேல், கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார். மும்பை அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்.
தற்போது குஜராத் அணியில் பார்த்திவ் படேல் இணையவுள்ளதால், மும்பை அணியுடனான 4 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வரவுள்ளது. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட பார்த்திவ் படேல், குஜராத் அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் முக்கிய நபராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
- பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல்.
- தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டமும், 2023 ஆம் ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த அணி குஜராத் டைட்டன்ஸ். சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் என்ற தனியார் நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் மற்றும் டொரென்க் குழுமம் சிவிசி கேப்பிட்டல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அணியில் பெரும்பான்மை பங்குகளை தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.
எனினும், அதானி குழுமம் மற்றும் டொரென்ட் குழுமம் குஜராத் அணியில் அதிக பங்குகளை வாங்க ஆர்வம் செலுத்துவதாக தெரிகிறது. தற்போதைய மதிப்பீட்டின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 363 கோடியே 25 லட்சம் துவங்கி அதிகபட்சம் 1.5 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 544 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக 2021 ஆம் ஆண்டு சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் இந்த அணியை ரூ. 5 ஆயிரத்து 625 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
- ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டாஸ் போடப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டி கைவிடப்பட்டதை அடுத்து புள்ளிகள் அடிப்பைடையில் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக குஜராத் அணி விளையாட இருந்த போட்டி இதே போன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
- ஐதராபாத் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏழு மணியில் இருந்து டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மைதானத்தில் இன்னமும் மழை நீடிப்பதால் டாஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.
- சுப்மன் கில்லுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது போட்டிக்கான சம்பளம், இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குஜராத் அணி இந்த சீசனில் இரண்டாவது முறையாக இதுபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
இதனால் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக என்பதால் சுப்மான் கில்லை தவிர்த்து அணியில் விளையாடி இம்பேக்ட் பிளேயர் உள்பட 11 வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2-வது முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால், கேப்டனை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது இந்த போட்டிக்கான சம்பளத்தில் 24 சதவீதம், இதில் எது குறைவானதோ அது அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின் முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் சதத்தால் 231 ரன்கள் குவித்தது.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டேரில் மிட்செல் 63 ரன்களும், மொயீன் அலி 56 ரன்களும் அடித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் சுப்மன் கில் பீல்டிங் செய்தார். அதன்பின் போட்டி முடியும் வரை டெவாட்டியா பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர்.
- குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு 1 ரன்னில் ரச்சின் அவுட் ஆனார். உடனே ரகானேவும் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.
டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த துபே 21, ஜடேஜா 18, சாண்டனர் 0 என வெளியேறினர்.
இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
- சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர்.
சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.