என் மலர்
நீங்கள் தேடியது " India"
- போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
- நாட்டின் மீது குற்றம்சாட்டப்படுவது முதல் முறை.
அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆண்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றம் சீனாவில் இருந்து அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தியா மீது இத்தகைய குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இந்தியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பல்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. எனினும், ஒட்டுமொத்த நாட்டின் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்து வருகிறது. போதை பொருள் பயன்பாட்டை குறைக்கவும், சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், போதை பொருள் தயாரிப்புக்கான ஃபெண்டானில் என்ற ரசாயன கடத்தலில் சீனா மற்றும் இந்தியா தான் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஃபெண்டானில் என்ற ரசாயனக் கலவை வலி நிவாரணி வடிவில் வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஃபெண்டானில் ரசாயம் செயற்கை போதையை உருவாக்கும் தன்மை கொண்டது ஆகும். சில வகை அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் ஃபெண்டானில் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்து இருக்கிறது. எனினும், இதன் அளவு சற்று அதிகரித்தாலும் போதைப் பொருளாக மாறும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பயன்படுத்தும் போது, மக்கள் இதற்கு அடிமையாகவும் வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக போதை பொருள் தயாரிக்கும் கும்பல்கள் இந்த ரசாயனத்தை போதைப் பொருளாகவே மாற்றியுள்ளன. இது பொடி மற்றும் மாத்திரை வடிவில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமெரிக்க போதை பொருள் கடத்தல் கும்பல்கள் ஃபெணடானில் தயாரிப்பதற்கான ரசாயனங்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து அதிகளவில் வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஃபெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக் கொண்டதால் 52 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதை அடுத்து, இதனை ஒழிக்கும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காகவே ஃபெண்டானில் தயாரிப்பதற்கான ரசயானங்களை தயாரிக்கும் சீனா மீது அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், போதை பொருள் கடத்தலை தடுத்த தவறியதாக கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
- இந்தியாவில் 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அவர் பேசியதாவது:-
மோடி அரசு கடந்த 2014-ம் ஆண்டு ராஷ்டிரீய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது. அப்போது இருந்து நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், பால் உற்பத்தி மேலும் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
தற்போது, உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியாதான். 23 கோடியே 90 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில், பால் உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்தியாவில், 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம் ஆகும்.
ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து, மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
- முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.
- எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என தெரிவித்தார்.
டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.
ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர்.
அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன்.
ஏப்ரல் 2-ம் தேதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாமும் அவர்களிடம் வசூலிப்போம் என தெரிவித்தார்.
- அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது.
- இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த ஒன்பது மாதங்கள் சிக்கத் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியது குறித்து அவரது குடும்பத்தார் (அண்ணி) தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது, "அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது. எங்களிடம் அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இல்லை. ஆனால் அவர் நிச்சயமாக விரைவில் இந்தியாவுக்கு வருவார் என நம்புகிறேன்," என்று சுனிதா வில்லியம்ஸ் அண்ணி ஃபல்குனி பாண்ட்யா தெரிவித்தார்.
"அவர் இந்தியா மற்றும் இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார். அவர் திரும்பி வருவார் என்பது எனக்குத் தெரியும். இது நேரம், அட்டவணை மற்றும் தளவாடங்களின் விஷயம்" என்று திருமதி பாண்ட்யா கூறினார்.
சுனிதா வில்லியம்ஸ் வீடு திரும்பிய பிறகு, கோவிலில் இருந்து பேட்டியளித்த பாண்ட்யா, "எல்லாம் நன்றாக நடந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்ததாக," கூறினார்.
- தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.
- தவறை ஒப்புக்கொண்டதாக புரிந்து கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புனேயில் நடந்த அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 20 வயது இந்திய நீண்ட தூர ஓட்டபந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவிடம் உலக ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் சிறுநீர் மாதிரியை எடுத்தனர்.
இதனை பரிசோதனை செய்து பார்த்ததில் 'ஆக்சன்ட்ரோலோன்' என்ற தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உலக தடகள நேர்மை கமிட்டி விசாரணை நடத்தியது. இது குறித்து தனது தரப்பு விளக்கத்தை அளிக்கும் படி அர்ச்சனா ஜாதவுக்கு பலமுறை நினைவூட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டது.
அதற்கு அவர் முறையான பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் அவர் விசாரணையின்றி தனது தவறை ஒப்புக்கொண்டதாக புரிந்து கொள்ளப்பட்டது. எனவே உலக தடகள நேர்மை கமிட்டி அர்ச்சனா ஜாதவ் போட்டியில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை கடந்த ஜனவரி 7-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது.
2024-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதியில் இருந்து அவரது போட்டி முடிவுகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், அந்த காலகட்டத்தில் அவர் வென்ற பதக்கங்களும் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
- இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தனர்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வென்ற அணிக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசு தொகையை வழங்கினர்.
9 ஃபோர்கள் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்
அதிக சிக்ஸ் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்
கேம்சேஞ்சர் ஆஃப் தி மேட்ச் விருதை ஷபாஸ் நதீம் வென்றார்
சிறந்த பவுலருக்கான விருதை ஷபாஸ் நதீம் வென்றார்
ஆட்ட நாயகன் விருதை 50 பந்துகளில் 74 ரன்கள் அடித்த அம்படி ராயுடு வென்றார்.
இந்த சீசனில் அதிக ஃபோர் எடுத்த குமார் சங்கக்காரா (38 ஃபோர்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.
இந்த சீசனில் அதிக சிக்ஸ் எடுத்த ஷேன் வாட்சன் (25 சிக்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெற்றி பெற்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இரண்டாவது இடம் பிடித்த ரன்னர் அப் அணியான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
- கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
புதுடெல்லி:
தற்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன.
இந்நிலையில், மேற்கண்ட 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த மசோதாவில், தற்போதைய 4 மசோதாக்களில் ஏற்கனவே உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை.
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.
இந்த மசோதா நிறைவேறியவுடன், பழைய 4 மசோதாக்களும் ரத்து செய்யப்படும். சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கேற்ப இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட்டையோ அல்லது போலி விசாவையோ அல்லது முறைகேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள்வரையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும்.
வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.
மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.
வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலத்தில் விஜிலென்ஸ் குறித்த விவாதப் போட்டி நடைபெற்றது.
- தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த விவாதபோட்டியில் ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்றது.
சேலம்:
சேலம் உருக்காலையின் விஜிலென்ஸ் துறை சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சேலம் சோனா காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கு இடையே "ஊழலற்ற இந்தியா - வளர்ந்த இந்தியா" என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடைபெற்றது.
மேலாண்மைத் தலைவர் பி.கே. அஞ்சலி வரவேற்று பேசுகையில், விவாதப் போட்டிக்கு சோனா கல்லூரியை தேர்வு செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
சேலம் உருக்காலையின் விஜிலென்ஸ் துறை பொது மேலாளர் சுப்பா ராவ் பேசுகையில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, ஊழலுக்கு எதிராக போராட ஒவ்வொரு குடிமகனின் பங்கையும் வலியுறுத்தினார்.
கடந்த 3 ஆண்டாக சோனா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சேலம் உருக்காலைக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார்.
- கலப்பு சீனியர் பிரிவில் இந்திய இணை, கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தியது
- ஒட்டு மொத்தமாக இந்தியா 25 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு சீனியர் பிரிவில் ரிதம் சங்வான் மற்றும் விஜய்வீர் சித்து ஜோடி கஜகஸ்தானின் இரினா யூனுஸ்மெடோவா மற்றும் வலேரி ரகிம்ஜான் ஜோடியை 17-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

அதே போல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சாம்ராட் ராணா இணை, உஸ்பெகிஸ்தானின் நிகினா சைட்குலோவா மற்றும் முகமது கமலோவ் ஜோடியை 17-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 28 தங்கப் பதக்கங்களில் 25 ஐ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை தெளிவாக உள்ளது.
- ரஷியாவிலிருந்தும் இந்தியாவின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன.
புதுடெல்லி :
சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான 'ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட்' நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் நாட்டின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் நாம் வெற்றியடைவோம். ஏனெனில் உணவுப் பொருட்களின் விலைகள் மீதான வினியோக பக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்ய ஒரு மிக நல்ல கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை தெளிவாக உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இது நெகிழ்வுத்தன்மை பிரிவுக்குள் நன்றாக இருக்கும்.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜனவரி முதல் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
பணவீக்கம் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படப் போகிறது. ஆனால் இந்தியாவுக்குள், விவசாய பொருட்கள் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் நாம் வசதியான நிலையில் இருக்கிறோம்.
நல்ல, வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கிறேன்.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரை நாட்டின் நலன் சார்ந்த தனது நிலைப்பாட்டை இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் வெளிப்படுத்தியுள்ளது. எனக்கு மலிவு விலைகள் இருக்க வேண்டும், நிலையான விலைகளை கொண்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகளாவிய பொது பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சரக்குகளின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டால், அது நம்மில் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
பல நாடுகளைப் போலவே, ரஷியாவிலிருந்தும் இந்தியாவின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் ரஷியாவிலிருந்து வாங்குவதற்கு விலை காரணி சாதகமாக உள்ளது. இதில் இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
- பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது.
- இந்தியா அமைதியை தான் விரும்புகிறது.
பெங்களூரு :
பெங்களூரு இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா வசந்தபுராவில் உள்ள ராஜாதிராஜ கோவிந்தன் கோவிலில் வைத்து நேற்று நடைபெற்றது.
இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பல மொழிகளில தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூலை வெளியிட்டு பேசியதாவது:-
குருசேஷத்திர போர்க்களத்தில் தான் பகவான் கிருஷ்ணர் காவிய விரிவுரையை நிகழ்த்தினார். இது பகவத் கீதை என்று நம்மால் அறியப்பட்டது. பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது. பகவத் கீதையை படிப்பதும், அதை வாழ்க்கையில் உள் வாங்வதும் ஒரு நபரை அச்சமின்றி வாழ வழிகாட்டுகிறது.
போர், வன்முறையை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. இந்தியா அதனை விரும்புவதும் இல்லை. அமைதியை தான் விரும்புகிறது. என்றாலும், அநீதி மற்றும் ஒடுக்கு முறைக்கு நடுநிலையாக இருக்க முடியாது. அநீதி மற்றும் அடக்கு முறைக்கு நடுநிலையாக இருப்பது நமது இந்தியாவின் இயல்பு கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் இஸ்கான் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.