என் மலர்
நீங்கள் தேடியது "Indian-origin student"
- ஸ்பெல்லிங் பீ இறுதிப் போட்டியில் 8 பேர் பங்கேற்றனர்.
- இதில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
வாஷிங்டன்:
உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் சொற்களைச் சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியின் நூற்றாண்டு விழா.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் தகுதிச்சுற்றுக்கு 243 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2025 இறுதிப்போட்டி நடந்தது.
இந்தப் போட்டியின் இறுதியில் டெக்சாசைச் சேர்ந்த இந்திய வம்சாவளியின் 13 வயது மாணவர் பைசான் ஜகி சாம்பியன் பட்டம் வென்றார்.
வெற்றி பெற்ற பைசான் ஜகிக்கு 50,000 டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பைசான் ஜகி கடந்தாண்டு நடந்த போட்டியில், சிறிய தவறால் சாம்பியன் பட்டத்தை இழந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
- இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
வாஷிங்டன்:
உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ' எனப்படும் சொற்களை சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் 1.1 கோடி பேர் பங்கேற்றனர். அவர்களில் இருந்து தகுதிச்சுற்றுக்கு 228 பேரும், இறுதிப்போட்டிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2024 இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியின் இறுதியில் நடந்த டை பிரேக்கர் சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது மாணவர் புருகத் சோமா 90 விநாடிகளில் 29 வார்த்தைகளைச் சரியாக உச்சரித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
வெற்றி பெற்ற புருகத் சோமாவிற்கு 50,000 டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த பைஜன் ஜகி என்ற மாணவர் 2-வது இடமும், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷ்ரேய் பரேக் 3-வது இடமும் பிடித்தனர்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி போலீசார் அறிவித்தனர்.
19 வயதான பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் டாக்டர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி போலீசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.
இதையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி போலீஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பின்னர் இந்த வழக்கில் 19 வயதான கயேஜ் பெதுனே என்ற அமெரிக்கர் சிக்கினார்.
இல்லினாய்சை சேர்ந்த இவர், பிரவிண் வர்க்கீசை சம்பவத்தன்று (2014-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி) இரவு ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.
இப்போது பெதுனே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம்.
4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன்சாவில் நீதி கிடைத்து உள்ளதில் பிரவிண் வர்க்கீசின் தாயார் லவ்லி வர்க்கீஸ் நிம்மதி அடைந்து உள்ளார்.






