search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "joint military exercise"

    • அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
    • போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசி 30 பேர் காயமடைந்தனர்,

    வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இன்று, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.

    இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இது தாக்குதலுக்கு முந்தைய ராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.

    தென் கொரியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

     

    கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசின.

     

    இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதியில் இந்தியா-நேபாள ராணுவ வீரர்கள் இணைந்து 4-வது நாளாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். #IndoNepalMilitaryExercise
    பிதோரகார்:

    இந்தியா மற்றும் நேபாளம் நாட்டின் ராணுவத்தினர் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதியில் சூரிய கிரண் என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தடுப்பு முயற்சியை இருநாடுகளும் தீவிரப்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.

    இன்று நான்காவது நாளாக இந்தியா-நேபாள ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மலை உச்சியில் உள்ள ஹெலிபேடு தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதேபோல் கரடுமுரடான மலைப்பாதைகளில் வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டனர்.



    பயிற்சியில் இந்தியா மற்றும் நேபாளம் சார்பில் தலா 300 ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஊருடுவல் முயற்சி முறியடிப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான தங்கள் அனுபவங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர்.

    இந்த ராணுவ பயிற்சி ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மூலம் இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடியும். குறிப்பாக மலைப்பிரதேசங்களில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கட்டுக்குள் வைக்க முடியும் என இந்திய ராணுவம் கூறியுள்ளது. #IndoNepalMilitaryExercise
    ×