search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam Government Arts College"

    • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு பேராசிரியை தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி செயல் பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுநிலை 2-ம் ஆண்டு பேராசிரியை தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் கல்லூரி முதல்வர் மாதவியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுகுறித்து இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி, கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என் கல்லூரி முதல்வர் மாதவி சுற்றறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியை ஈரோடு தாளவாடி அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கல்லூரி கல்வி இயக்குநரின் உத்தரவை தொடர்ந்து வழக்கம்போல் இன்று கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

    ×