search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manthiram"

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த “துக்க நிவாரண அஷ்டகத்தை” கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த "துக்க நிவாரண அஷ்டகத்தை" கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    துக்க நிவாரண அஷ்டகம்

    மங்கள ரூபிணி மதியணி சூலினி

    மன்மத பாணியளே;

    சங்கடம் நீக்கிடச் சடுதியில்

    வந்திடும்

    சங்கரி சவுந்தரியே!

    கங்கண பாணியன் கனிமுகங்

    கண்டநல்

    கற்பகக் காமினியே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    கானுறு மலரெனக் கதிர்

    ஒளி காட்டிக்

    காத்திட வந்திடுவாள்;

    தானுற தவஒளி தாரொளி மதி

    யொளி தாங்கியே வீசிடுவாள்;

    மானுறு விழியாள் மாதவர்

    மொழியாள்

    மாலைகள் சூடிடுவாள்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    சங்கரி சவுந்தரி சதுர்முகன்

    போற்றிடச்

    சபையினில் வந்தவளே;

    பொங்கரி மாவினில் பொன்னடி

    வைத்துப்

    பொருந்திட வந்தவளே;

    எங்குலந் தழைத்தட எழில்வடிவுடனே

    எடுத்தநல் துர்க்கையளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரண காமாட்சி!

    கொடுத்தநல் குமரியளே;

    சங்கடம் தீர்த்திட சமரது செய்தநற்

    சக்தியெனும் மாயே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    எண்ணிய படி நீ அருளிட வருவாய்

    எங்குல தேவியளே;

    பண்ணிய செயலின்

    பலனது நலமாய்ப்

    பல்கிட அருளிடுவாய்;

    கண்ணொளியதனால்

    கருணையைக் காட்டிக்

    கவலைகள் தீர்ப்பவளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    தணதண தந்தன தவிலொலி

    முழங்கிட

    தண்மணி நீ வருவாய்;

    கணகண கங்கண

    கதிர்ஒளி வீசிடக்

    கண்மணி நீ வருவாய்;

    பணபண பம்பண பறையொலி

    கூவிடப்

    பண்மணி நீ வருவாய்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி

    பஞ்சநல் பாணியளே;

    • பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
    • உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும். உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

    மந்திரங்கள் மிக,மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன.

    ஓம் கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா, ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய, ஜெய சாய் என்றெல்லாம் சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.

    இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக உச்சரிக்கலாம்.

    இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.

    எந்த மந்திரம் உச்சரித்தாலும் ஓம் என்று முதலில் சொல்லி தொடங்குங்கள்.

    ஓம் என்று அடி வயிற்றில் இருந்து உச்சரிக்கும் போது உடலும், மனமும் வலு அடையும்.

    குறிப்பாக இதயத்துக்கு நல்லது.

    பிரபஞ்சத்தில் ஓம் என்ற ஒலி கேட்பதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

    உலகின் அச்சாணியாக ஓம் உள்ளது. எனவே முடிந்த போதெல்லாம் ஓம் சொல்லுங்கள். இதயம் சுகமாகும்.

    வாழ்க வளமுடன் என்று சொல்வது கூடமிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக கருதப்படுகிறது.

    திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி வாய்ந்தவை.

    பன்னிரு திருமுறைகளில் சகல காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக புதைந்து கிடப்பதை காணலாம்.

    • இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடிகொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது.
    • அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

    இப்படி 'ஓம்' மாதிரியான வேதமந்திரங்கள் நம் உடலுக்குள் மட்டும் தனது முழு சக்தியைப் பயன்படுத்தி நற்செயல்களை செய்வதில்லை.

    வெளியிலும் தன் ஆற்றலை பிரயோகிக்கிறது.

    இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடி, கொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது.

    அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

    நமது முன்னோர்கள் பலர் தங்களை வருத்தும் கொடிய நோய்கள் தீர விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி, துளசி அர்ச்சனை செய்து வந்திருக்கிறார்கள்.

    அவர்கள் நோயும் குணமாகி இருக்கிறது.

    ஓம் சக்தி பராசக்தி என்று சொன்னால் நமக்கு நல்ல துணிவும், உள்ளத்தில் நல்ல தெளிவும் கிடைக்கும்.

    கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் இந்த மந்திரங்களைச் சொல்லி வந்தால் அதன் பலன் அநேகம்.

    பொதுவாக மந்திரங்களை 108 முறை தொடர்ந்து சொல்ல வேண்டும்.

    அல்லது 1008 முறை சொல்ல வேண்டும்.

    • ‘உ’ என்பது நடுப்பகுதியிலும், ‘ம’ என்பது மேல் பகுதியிலும் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • எனவே ‘ஓம்’ என்று நாம் உச்சரிக்கும் போது அது நுரையீரல் முழுவதையும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.

    வேத மந்திரங்களின் ஒலிகளுக்கு நரம்புகளை மிருதுவாக்கி தூய்மைப்படுத்தும் சக்தி இருக்கிறது.

    பிராண வாயுவை ரத்தக் குழாய்களில் எந்தவிதமான இடையூறும் இன்றி எடுத்துச் செல்லப் பயன்படுகிறது.

    ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பு, கசடு, அடைப்புகளை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

    மந்திரம் என்று சொல்கிறபோது அதன் முதல் நிலையாக அமைந்திருப்பது 'ஓம்' என்னும் மந்திரச்சொல்.

    ஓம் என்பதில் அ, உ, ம என்ற மூன்று ஒலிகள் இருக்கின்றன.

    'அ' என்கிற ஒலியானது நுரையீரல் பகுதியின் கீழ் பகுதியில் உள்ளது.

    'உ' என்பது நடுப்பகுதியிலும், 'ம' என்பது மேல் பகுதியிலும் தொடர்பு கொண்டிருக்கிறது.

    எனவே 'ஓம்' என்று நாம் உச்சரிக்கும் போது அது நுரையீரல் முழுவதையும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது.

    நுரையீரல் இப்படிச் செயல்படுவதால் அதோடு இணைந்து செயல்படும் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

    • ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.
    • சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    பிரணவ மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள், வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    சில மந்திரங்களை ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.

    ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால் நிச்சயம் பலன் தேடி வரும்.

    சில மந்திரங்களை காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்கவேண்டும்.

    சில மந்திரங்களை திருமணம் ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.

    ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல் மந்திரங்களை சொல்லக்கூடாது.

    இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.

    தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 தடவை சொல்வது மிகவும் நல்லது.

    வீட்டில் அமர்ந்து மந்திரங்களை சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு பலன்களை அள்ளித்தரும்.

    • சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.
    • பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

    மனம் + திரம் = மந்திரம். மனதுக்கு திடம் கொடுப்பதுதான் மந்திரம்.

    சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.

    பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

    இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டனர்.

    சரியான மந்திரங்களை உச்சரித்து பலன் பெற்றனர்.

    மந்திரங்கள் பல கோடி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மந்திரங்கள் சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம் இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.

    ×