search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist Communist Party Office"

    • ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.
    • ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

    நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

    பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் அடித்து நொறுக்கிய நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    9 பிரிவுகளில் வழக்குப்பதிந்த பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் 13 பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

    ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம்.

    தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

    சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

    நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.
    • மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை அருகே உள்ள நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன் (வயது 28).

    இவரும், பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த முருகவேல் மகள் உதய தாட்சாயினி(23) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் பாளை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதனிடையே மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இந்த தகவலை அறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் நேற்று மாலையில் மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் சென்ற பெண்ணின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை சூறையாடினர்.

    இந்த தாக்குதலில் அங்கிருந்த வக்கீல் பழனி, அருள்ராஜ் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து உதய தாட்சாயினிக்கு திருமணம் செய்து வைத்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து பெண்ணின் தந்தை முருகவேல்(55), பெண்ணின் அண்ணன் சரவணக்குமார்(27), தாய்மாமாவான புதுப்பேட்டையை சேர்ந்த சங்கர்(35), உறவினர்கள் குரு கணேஷ்(27), மதுரை யோகீஸ்வரன்(23), பெண்ணின் தாய் சரஸ்வதி(49), மார்த்தாண்டத்தை சேர்ந்த சித்தி சுமதி(44), பாட்டி ராஜிலா(75), பெரியம்மா புதுப்பேட்டையை சேர்ந்த அருணாதேவி(51), மதுரை பெரியம்மா வேணி(52), அக்காள்கள் ஸ்டெல்லா(29), சூர்யா(32) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த பிரச்சனையில் தொடர்புடைய பந்தல் ராஜாவும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது அத்துமீறி கும்பலாக நுழைவது, மிரட்டல், சூறையாடுவது, பெண்களை தவறான வார்த்தையில் பேசியது உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் பெண்ணின் பாட்டி ராஜிலா வயது மூப்பின் காரணமாகவும், பெண்ணின் அக்கா சூர்யா கைக்குழந்தையுடன் இருப்பதன் காரணமாகவும் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்ற 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×