search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noi Theerkkum Slogam"

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த “துக்க நிவாரண அஷ்டகத்தை” கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    அனைத்து விதமான நோய்களையும் நீக்கும் இந்த "துக்க நிவாரண அஷ்டகத்தை" கூறி, அம்பாளை வழிபட உங்கள் நோய்கள் யாவும் நீங்கிடும்.

    துக்க நிவாரண அஷ்டகம்

    மங்கள ரூபிணி மதியணி சூலினி

    மன்மத பாணியளே;

    சங்கடம் நீக்கிடச் சடுதியில்

    வந்திடும்

    சங்கரி சவுந்தரியே!

    கங்கண பாணியன் கனிமுகங்

    கண்டநல்

    கற்பகக் காமினியே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    கானுறு மலரெனக் கதிர்

    ஒளி காட்டிக்

    காத்திட வந்திடுவாள்;

    தானுற தவஒளி தாரொளி மதி

    யொளி தாங்கியே வீசிடுவாள்;

    மானுறு விழியாள் மாதவர்

    மொழியாள்

    மாலைகள் சூடிடுவாள்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    சங்கரி சவுந்தரி சதுர்முகன்

    போற்றிடச்

    சபையினில் வந்தவளே;

    பொங்கரி மாவினில் பொன்னடி

    வைத்துப்

    பொருந்திட வந்தவளே;

    எங்குலந் தழைத்தட எழில்வடிவுடனே

    எடுத்தநல் துர்க்கையளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரண காமாட்சி!

    கொடுத்தநல் குமரியளே;

    சங்கடம் தீர்த்திட சமரது செய்தநற்

    சக்தியெனும் மாயே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    எண்ணிய படி நீ அருளிட வருவாய்

    எங்குல தேவியளே;

    பண்ணிய செயலின்

    பலனது நலமாய்ப்

    பல்கிட அருளிடுவாய்;

    கண்ணொளியதனால்

    கருணையைக் காட்டிக்

    கவலைகள் தீர்ப்பவளே;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    தணதண தந்தன தவிலொலி

    முழங்கிட

    தண்மணி நீ வருவாய்;

    கணகண கங்கண

    கதிர்ஒளி வீசிடக்

    கண்மணி நீ வருவாய்;

    பணபண பம்பண பறையொலி

    கூவிடப்

    பண்மணி நீ வருவாய்;

    ஜெயஜெய சங்கரி கவுரி க்ருபாகரி

    துக்க நிவாரணி காமாட்சி!

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி

    பஞ்சநல் பாணியளே;

    ×