என் மலர்
நீங்கள் தேடியது "Omni bus fares high"
- பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
- கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட் காலியாகிவிடுவதால், ஆம்னி பஸ்களை நாடிச்செல்கிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தாலும் கூட, அதையும் பொருட்படுத்தால் பல மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு என்று உயர்ந்துவிட்டது. குறிப்பாக, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (6-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம்.
இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவுகளும் முடிந்து விட்டது. ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இதனால் தனியார் ‘ஆம்னி’ பஸ்களை பயணிகள் நாடி வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் திடீரென கட்டணத்தை உயர்த்திவிட்டது.
சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை - நெல்லைக்கு ஏ.சி. சிலீப்பர் பஸ் டிக்கெட் கட்டணம் ரூ. 2,250, மதுரைக்கு பஸ் கட்டணம் ரூ. 1,100 முதல் ரூ. 1,500-ம், ஏ.சி. சிலீப்பக் பஸ் கட்டணம் ரூ. 1,800 முதல் ரூ. 2000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
சென்னை - பெங்களூர், கோவை, திருச்சிக்கு ரூ. 1,500 முதல் ரூ. 1,800, கன்னியாகுமரிக்கு ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் திடீர் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு போதுமான அளவு சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட வேண்டும்.
தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரித்து வசூலிக்கிறார்கள்.
சென்னை - நெல்லைக்கு டிக்கெட் கட்டணம் ரூ. 2,250 வசூலிப்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு ஆம்னி பஸ்களில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். முறை கேடாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Diwali






