என் மலர்
நீங்கள் தேடியது "One Nation One Eection"
- ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு குழுவினரிடம் ஒருமித்த கருத்து நிலவியதாக தகவல்.
- மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்திய 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த பரிந்துரை.
பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழுவை நியமித்தது.
இந்தக் குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு பொதுமக்கள் இடம் இருந்து சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேறப்ட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை 18,626 பக்கங்கள் கொண்டது என தகவல் வெளியானது.
அந்த அறிக்கையில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றம் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த குழு ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும், தேர்தல் நடத்தப்பட்ட 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே தேர்தல் தேர்தல் நடைமுறை மற்றும் நிர்வாகத்தை மாற்றும் எனவும் தெரிவித்துள்ளது.
- பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 8-ம் தேதி நடந்தது.
- பாராளுமன்ற கூட்டுக்குழுவில் 31 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
புதுடெல்லி:
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதால் இதற்கான மசோதா கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும், ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும், மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், மக்களவை ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராக பா.ஜ.க. எம்.பி. பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டார். இதில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றனர். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் வரும் 31-ம் தேதி பாராளுமன்ற மைய மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங், முன்னாள் மக்களவைச் செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு, 2024 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது. இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கையை உருவாக்குவதற்கு மத்திய அரசு ரூ.95,344 செலவிட்டதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்தியா டுடே சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு 194 நாட்களில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அப்படியென்றால் ஒருநாளைக்கு 491 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் உறுப்பினர்கள் கவுரவ அடிப்படையில் அறிக்கைக்கு பங்களித்ததாக அரசு தெரிவித்துள்ளது.






