என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Padma Bhusan
நீங்கள் தேடியது "Padma Bhusan"
சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். #PadmaAwards #Mohanlal #Prabhudeva
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201903111123270779_1_Padma-Awards-Prabhudeva2._L_styvpf.jpg)
இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva #ShankarMahadevan
மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201901261806396871_1_Padma-Awards2._L_styvpf.jpg)
பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva
பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகள் பெற்ற சர்வக்யா சிங் கடியார் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ :
கான்பூர் பலைகலைக்கழக துணை வேந்தராக 1994-ம் ஆண்டு முதல் 20017-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சர்வக்யா சிங் கடியார். இவர் என்சைமாலஜி எனும் மனித உடலில் உள்ள செல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானி ஆவார். நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை 2003-ம் ஆண்டும், பத்ம பூஷன் விருதை 2009-ம் ஆண்டும் மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
இந்நிலையில், சர்வக்யா சிங் கடியார் இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கடந்த வருடம் தனது மனைவியின் மறைவை தொடர்ந்து கடும் மன அழுத்தால் அவதிப்பட்டு வந்த கடியார், ’மனைவியின் மறைவு கொடுத்த வலியை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், குணப்படுத்த முடியாத உடல் உபாதைகள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் அவரது உறவினர்கள் கூறினர். மனைவின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் பத்ம பூஷன் விருது பெற்ற நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
×
X