search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parvinder Singh Kurana"

    • குரானாவுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது.
    • இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குரானா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பர்விந்தர் சிங் குரானாவுக்கு கடந்த ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    குரானாவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை அடுத்து டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குரானா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐகோர்ட் விதித்த தற்காலிக தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இதுதொடர்பாக, நீதிபதிகள் கூறுகையில், குரானா மீது பயங்கரவாத குற்றம் சாட்டப்படாத நிலையில் ஐகோர்ட் ஜாமினில் தாமதம் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும், பயங்கரவாத வழக்குகளில் யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது போன்ற அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே ஜாமின் உத்தரவை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க வேண்டும். அங்கு ஒழுங்கு முறைகேடு அல்லது சட்ட விதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இப்படி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இது பேரழிவை ஏற்படுத்தும். இப்படி தடை கொடுத்தால் பேரழிவுதான் ஏற்படும் என தெரிவித்தனர்.

    எந்தவொரு காரணமும் கூறாமல் இயந்திரத்தனமான முறையில் ஜாமின் உத்தரவுகளை நிறுத்தி வைப்பதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட காரணங்களை தெரிவிக்காமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக வழக்கமான ஜாமின் உத்தரவை நீட்டித்த டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

    ×