என் மலர்
நீங்கள் தேடியது "Pasuram-23"
- காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே!
- உதய காலத்து வெளிச்சம் தோன்றியது.
திருப்பாவை
பாடல்
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
விளக்கம்:
வீரமுடைய ஒரு சிங்கம் மழைக்காலத்தில் வெளியே வர முடியாமல் மலையில் உள்ள குகையில் நீண்ட காலம் படுத்து தூங்குகிறது. மழைக்காலம் முடிந்த பின் திடீரென விழித்தது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்க பிடரி சிலிர்த்து நான்கு புறமும் திரும்பிப்பார்த்து கர்ஜனை செய்து குகையில் இருந்து வெளியே புறப்படுகிறது. அந்த சிங்கத்தைப் போல் காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே! நீயும் உன் திருக்கோவிலில் இருந்து நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளைக்கேட்டு அருள் செய்ய வேண்டும். எங்கள் வாழ்விற்கு வேண்டிய நல்லவை. கெட்டவை அறிந்து அருள்புரிவாயாக!
திருவெம்பாவை
பாடல்
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
அழகிய குயில்கள் கூவின. கோழிகள் கூவின. மற்ற பறவைகளும் ஒலி எழுப்பின. சங்குகள் முழங்கின. வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் ஒளி மறைந்தது. உதய காலத்து வெளிச்சம் தோன்றியது. தேவாதி தேவனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! எமக்கு அன்புடன் உன் வீரக்கழல் அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி அருள வேண்டும். யாராலும் அறிய முடியாத தன்மை உடையவனே! எளிமையானவனே! எம்முடைய தலைவனே! துயில் நீங்கி எழுவாயாக!
- காயாம்பூவைப் போன்ற கருநீல நிற முடைய கண்ணனே!
- திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்:
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக்
கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
மழைக் காலத்தில் காட்டில் ஒரு குகையில் காலம் மறந்து உறங்கும் சிங்கம், தானாக உணர்ந்து எழுந்து, அனல் பறக்கும் கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்க்க, சோம்பல் முறித்து, நெஞ்சை நிமிர்த்திப் புறப்படும். அதேபோல் காயாம்பூவைப் போன்ற கருநீல நிற முடைய கண்ணனே! உனது இடத்தில் இருந்து, எம்மிடம் வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரணத்தைக் கேட்டு அருள்புரிவாய்.
திருவெம்பாவை
பாடல்:
கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்; எமக் கெளியாய்
எம்பெரு மான்; பள்ளி எழுந்தரு ளாயே!
விளக்கம்:
குயில்கள் கூவுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப்பறவைகள் சத்தமிடுகின்றன. பொழுது விடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் விதமாக சங்குகளும் ஒலித்தன. கதிரவன் வரவால் விண்மீன்களும் மறைந்தன. சூரியன் ஒளி வீசுகின்றான். திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! எவரும் அறிந்து கொள்ள முடியாதவனும், எமக்கு எளியவனுமாகிய பெருமானே! தேவர்களுக்கு நற்கதியை அளிக்கும் உன் வீரக் கழல் அணிந்த பாதங்களை எமக்குக் காட்டும்படி துயில் நீங்கி எழுந்தருள்வாய்!






