என் மலர்
நீங்கள் தேடியது "Pasuram-28"
- உன்னை தலைவனாக பெற்று புண்ணியம் செய்து இருக்கிறோம்.
- இனிமையான அமுதம் போன்றவனே!
திருப்பாவை
பாடல்
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
கோவிந்தா! நாங்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். கட்டுச்சோறு கட்டிக்கொண்டு பசுக்களின் பின்னாலே காட்டுக்குள் சென்று சாப்பிடுவோம். படிப்பறிவு இல்லாதவர்களாகிய நாங்கள், விரதமிருக்கும் முறை பற்றி அறியாதவர்கள். ஆயர் குலமாகிய எங்கள் குலத்தில் வந்து நீ பிறந்தாய். உன்னை தலைவனாக பெற்று புண்ணியம் செய்து இருக்கிறோம். குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. ஏதும் அறியாத சிறு பிள்ளைகளான நாங்கள், அன்பினால் உன் பெருமையை மறந்து, 'கண்ணா! கோவிந்தா!' என்று உன் பெயரைச் சொல்லி சாதாரணமாக அழைத்துவிட்டோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் நோன்பை அன்புடன் ஏற்று அருள்புரிய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே
விளக்கம்
இனிமையான அமுதம் போன்றவனே! உலகில் அனைத்து பொருட்களுக்கும் முன்பு தோன்றி முதல் பொருளாகவும், இடைப்பட்டதாகவும், முடிவாகவும் ஆனவனே! பிரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்கள்! வேறு யார் உன்னை அறிவார்? பந்தினை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும், நீயும் உன்னுடைய அடியார்களுக்கு அருள, அவர்கள் வீடுகள் தோறும் எழுந்தருளியவனே! சிவந்த நெருப்பை போன்ற உன் திருமேனியையும், திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தண வேடத்தையும் காட்டி என்னை ஆட்கொண்டவனே! படுக்கையில் இருந்து பள்ளி எழுந்தருள்வாயாக!
- குறைகள் இல்லாத கோவிந்தனே!
- கிடைத்தற்கரிய முதலும், நடுவும், முடிவும் ஆனவனே!
திருப்பாவை
பாடல் :
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்!
அறிவொன்றும் இல்லாத ஆயக்குலத்து
உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!
உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீதாராய் பறையலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
குறைகள் இல்லாத கோவிந்தனே! எந்தவித ஞானமும் இல்லாத ஆயர்குலத்தில் நீ வந்து பிறக்க, நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம். பசுக்களின் பின்னே சென்று காட்டிற்குப் போய் கூடி உண்ணும் நாங்கள், உன்னோடு கொண்ட உறவினை ஒரு போதும் அறுக்க இயலாது. அன்பின் காரணமாக உன்னைச் சிறு பெயர்களால் (ஒருமையில்) அழைத்ததற்காக கோபம் கொள்ளாமல், இறைவனாகிய நீ எங்களுக்கு அருளோசையை தந்தருள்வாய்.
திருப்பள்ளியெழுச்சி
பாடல்:
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார்?
பந்தணை விரலியும்,நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
கிடைத்தற்கரிய முதலும், நடுவும், முடிவும் ஆனவனே! காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பிரம்மா, திருமால், ருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய மாட்டார்கள்; எனில் பின் வேறு யார் தான் அறிந்திடுவார்? வேதங்களாகிய பந்தினை தன் கைவிரல்களால் பிடித்து விளையாடும் உமையவளோடு, உனது அடியவர்களின் இல்லம் தோறும் எழுந்தருள்பவனே! எனக்கு நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைக் காட்டி, திருப்பெருந்துறை கோவிலையும் காட்டி, பின் குருவாகவும் காட்சி தந்து, என்னை ஆட்கொண்டு அருளினாய். நீ உனது துயில் நீங்கி எழுந்தருள்வாயாக!






