என் மலர்
நீங்கள் தேடியது "Prevention of Torture Act"
- க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
- கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் மீது போவி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் இந்த புகாரை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், 2014-ம் ஆண்டு நான் இந்திய அறிவியில் மையத்தின் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராக பணிபுரிந்தேன். அப்போது இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன், என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி பணி நீக்கம் செய்தார். இது தொடர்பாக சாதிய ரீதியில் அவதூறுகள், அச்சுறுத்தல்களுக்கும் ஆளானேன், என்று கூறி உள்ளார்.
துர்கப்பாவின் புகாரைத் தொடர்ந்து பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்போசிஸ் துணை நிறுவனர் சேனாபதி க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
இவர் மட்டுமின்றி, கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வேஸ்வரய்யா, ஹரி உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகையின் போது விலங்குகளை துன்புறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது போன்ற காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.
விலங்குகளின் வாலில் பட்டாசு கட்டி வெடிக்க வைத்தாலோ, பட்டாசுகளை கொளுத்தி விலங்குகள் மீது வீசினாலோ ஜெயில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டம் விலங்குகளுக்கு தேவையற்ற வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்துவதை தடை செய்கிறது. விலங்குகளை துன்புறுத்தினால் அவர்கள் மீது கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட அளவில் விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தின் தலைவராக இருக்கும் கலெக்டர்கள், மண்டல கால்நடை பராமரிப்பு இயக்குனர்கள், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள், மாவட்ட கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் தீபாவளி பண்டிகையின் போது விலங்குகளுக்கு தீக்காயம் ஏற்படுவது குறைந்துள்ளது. பட்டாசு சத்தம் விலங்குகளை பயமுறுத்தும்.

மனிதர்களை விட விலங்குகளுக்கு செவிதிறன் கூர்மையானது. அதிக டெசிபல் பட்டாசு வெடிக்கும்போது அதன் சத்தம் கேட்டு விலங்குகள் பீதி அடைந்து ஓடும்போது வாகனங்களில் அடிபடுகின்றன. இதனால் தீபாவளி பண்டிகையின்போது சாலை விபத்துகளில் விலங்குகள் அதிகம் காயம் அடைகின்றன. எனவே பொதுமக்கள் விலங்குகளிடம் மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையும் படியுங்கள்,,,சென்னையில் சாலைகளில் உள்ள குழிகளை மூட 1000 ஊழியர்கள் நியமனம் - மாநகராட்சி நடவடிக்கை






