search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Redemption as a corpse"

    • அந்த சமயத்தில் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பக்கிங்காம் கால்வாயில் குளிக்க சென்றுள்ளான்.
    • மரக்காணம் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகிவற்றுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் இ.பி. சாலையில் வசிப்பவர் பாபு. இவர் தனது மகன் இப்ராஹிம் (வயது 15) என்பவரை காரில் அழைத்துக் கொண்டு மரக்காணம் மேட்டு தெரு பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றுள்ளார் அப்போது பாபு தனது காரை பக்கிங்காம் கால்வாய் ஓரம் நிறுத்தி உள்ளார். அந்த சமயத்தில் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பக்கிங்காம் கால்வாயில் குளிக்க சென்றுள்ளான். அவன் குளிக்க சேர்ந்த சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி மாயமாகி விட்டான். இதனைப் பார்த்த அவனது தந்தை பாபு மகனைத் தேடி உள்ளார். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பாபு தனது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகிவற்றுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மாயமான பள்ளி மாணவன் இப்ராஹீமை கால்வாயில் தேடி வந்தனர். ஆனால் நேற்று இரவு வரை அவன் கிடைக்கவில்லை. இன்று காலை மீனவர்களின் உதவியுடன் மாயமான மாணவனை தேடினர். அப்போது மாணவன் இப்ராஹிம் இறங்கி குளித்த அதே இடத்தில் சேற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டான். இதனால் அவனது உடலை மட்டும் இன்று காலை மீனவர்கள் மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவன் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    ×