search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sellers arrested"

    • தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ப்படுவதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கண்டமனூர், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இதே குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    ×