என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை தடை"

    • போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய செல்வம், சிவக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பி சரவணன் மேற்கொண்டு வருகிறார்.

    இதனையடுத்து ஏ.எஸ்.பி. ரவீந்திர குமார் மேற்பார்வையில், வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் மற்றும் போலீசார் வளவனூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று சோதனை செய்தனர்.

    இந்நிலையில் பகண்டை சாலையில் சகாய செல்வம் (வயது 34) என்பவரின் பெட்டிக்கடையை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 24 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சகாய செல்வத்தை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் புதுச்சேரி மாநிலம் கொத்தம்புரி நத்தம் கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவரிடம் இருந்து வாங்கியதாக கொடுத்த தகவலின் பேரில் சிவகுமார் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 110 கிலோ எடை கொண்ட புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய செல்வம், சிவக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி கொல்லங்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் எஸ்.வி. ரோட்டில் பீடா கடை நடத்தி வருகிறார். மதேஸ்வரன் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று மாதேஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பாக்கெட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது போன்று அரூர் அருகே கீழ்பாட்சா பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (53என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை அரூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பாக்கெட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கிராமசபை கூட்டங்களில் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விடுதலை நாளையொட்டி, வரும் 15-ந் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள் ஊராட்சி மன்றங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மக்களின் குரலை ஒலிப்பதற்கான இக்கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் இயற்றப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டு மக்களைப் பீடித்துள்ள இரு தீமைகள் மதுவும், புகையும் தான். மதுவால் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் தங்கள் உயிர்களை இழக்கிறார்கள் என்றால், புகையால் ஆண்டு தோறும் 12 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மதுவால் ஏற்படும் பாதிப்புகளை விட புகையால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என அண்மைக்கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்ட உலக அளவிலான வயது வந்தோர் புகையிலைப் பயன்பாட்டு ஆய்வு முடிவில் இந்தியாவில் புகையிலையின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் புகையிலைப் பயன்பாடு 2009-10 ஆம் ஆண்டின் அளவான 16.20 விழுக்காட்டிலிருந்து நான்கில் ஒரு பங்கு அதிகரித்து 2016-17ஆம் ஆண்டில் 20.00 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு கர்நாடக மாநிலத்தில் 28.2 விழுக்காட்டிலிருந்து 22.80 சதவீதமாகவும், கேரளத்தில் 21.40 விழுக்காட்டிலிருந்து 12.70 சதவீதமாகவும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    நேரடியாக புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மற்றவர்கள் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் பணியிடங்களில் 20.20 விழுக்காட்டினரும், பொது இடங்களில் 18.70 விழுக்காட்டினரும் மற்றவர்கள் விடும் புகையால் பாதிக்கப்படுவதாக இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    இதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்தேன். ஆனால், அதற்கான சட்டத்தை அரசு முறையாக செயல்படுத்தாததால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

    தமிழ்நாட்டில் அனைத்து நிலைக் கடைகளிலும் புகையிலைப் பொருட்களும், சிகரெட்டுகளும் தடையின்றி கிடைக்கின்றன. புகைப்பிடிப்போரில் 81.10 விழுக்காட்டினர் கடைகளில் தான் சிகரெட் வாங்குகின்றனர். சிகரெட் புகைப்பவர்கள் அதற்காக மாதம்தோறும் சராசரியாக ரூ.1344 செலவிடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் சிகரெட் தாராளமாக கிடைப்பதால், புகைக்கும் பழக்கத்திற்கு மாணவர்கள் எளிதில் அடிமையாகின்றனர். இப்போக்கு எதிர்காலத் தலைமுறையை அழித்து விடக்கூடும்.

    புகைக்கும் புகையிலையை விட மெல்லும் புகையிலை தான் மிகவும் கொடுமையானதாகும். குறிப்பாக குட்கா எனப்படும் புகையிலைப் பாக்கு தான் வாய்ப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாகும். இதை தடை செய்வதற்கான சட்டத்தை தேசிய அளவில் நான் கொண்டு வந்தேன். அதன்படி தமிழகத்திலும் குட்கா தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்களின் உயிரைக் காக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரே கையூட்டு வாங்கிக் கொண்டு குட்கா விற்க அனுமதிக்கும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.

    சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமையைக் கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகும் அதை ஆட்சியாளர்கள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழலில் புகையிலை உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும். இதனால் ஏராளமானவர்கள் வேலையிழக்கக்கூடும் என்றாலும் அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற இது மட்டும் தான் தீர்வாகும். இந்த கடுமையான முடிவை அரசு எடுத்துதான் தீர வேண்டும்.

    எனவே, ஆகஸ்ட் 15-ந் தேதி விடுதலை நாளையொட்டி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பா.ம.க.வினரும், பொது மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டு நாடு முழுவதும் புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதை ஏற்று நாடு முழுவதும் புகையிலைக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #AnbumaniRamadoss

    ×