search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹசின் ஜஹான்"

    • ஆயிராவுடன் முகமது ஷமி ஷாப்பிங் சென்றது ஜஸ்ட் வெளிக்காட்டிக் கொள்வதற்காகத்தான்.
    • என்னுடைய மகள் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. புதிய பாஸ்போர்ட்டுக்கு முகமது ஷமியின் கையெழுத்து தேவை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் தனது மனைவியான ஹசின் ஜஹானை பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு ஆயிரா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆயிரா சில தினங்களுக்கு முன் முகமது ஷமியை சந்தித்தார். அப்போது அவர் ஷாப்பிங் அழைத்துச் சென்றார். அவருக்கு ஷூ வாங்கிக் கொடுத்தார்.

    ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது ஷமி பகிர்ந்தார். அதில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை மீண்டும் பார்த்தபோது என்னுடைய நேரம் நின்றது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்" அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் முகமது ஷமியின் முன்னாள் மனைவி, பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    ஆயிரா முகமது ஷமியை சந்தித்தது குறித்து ஹசின் ஜஹான் கூறியதாவது:-

    ஆயிராவுடன் முகமது ஷமி ஷாப்பிங் சென்றது ஜஸ்ட் வெளிக்காட்டிக் கொள்வதற்காகத்தான். என்னுடைய மகள் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. புதிய பாஸ்போர்ட்டுக்கு முகமது ஷமியின் கையெழுத்து தேவை. இதனால் அவரது தந்தையை சந்திக்க சென்றாள்.

    ஆனால், முகமது ஷமி கையெழுத்திடவில்லை. அவர் என்ளுடைய மகளுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். அந்த நிறுவனம் ஷமி விளம்பரத்தில் நடிக்கும் நிறுவனம். இதனால் அங்கு அழைத்து சென்றுள்ளார். அந்த கடையில் என்னுடைய மகள் ஷூ மற்றும் ஆடைகள் வாங்கியுள்ளார். அங்கு எது வாங்கினாலும் முகமது ஷமி பணம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் அங்கே அழைத்துச் சென்றுள்ளார். என்னுடைய மகள் விரும்பிய கித்தார் மற்றும் கேமரா. இதை அவர் வாங்கிக் கொடுக்கவில்லை.

    என் மகளைப் பற்றி விசாரித்ததே கிடையாது. ஷமி அவருடைய விசயத்திலேயே பிஸியாக இருக்கிறார். அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவளை சந்தித்தார். ஆனால் பின்னர் எதையும் வெளியிடவில்லை. இப்போது பதிவு செய்ய எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். எனவே அவர் இந்த வீடியோவைப் பதிவேற்றினார்

    இவ்வாறு ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.

    • சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும்

    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி முக்கிய பங்கு வகிக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது சமியின் திருமண வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.

    இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

    கடந்த 2020 மற்றும் 2021-ம் நிதியாண்டிற்கான சமியின் வருமான வரி கணக்கின்படி, சமியின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடிக்கு அதிகமாக இருந்ததாகவும், இதன் காரணமாக ஜீவனாம்சமாக மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் என்றும், ஹசின் ஜஹானின் செலவுக்கு ரூ.7 லட்சம் என்றும் மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் என்று ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து, கொல்கத்தா நீத்மன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து, சமியின் வழக்கறிஞர் சலீம் ரஹ்மான் கூறியிருப்பதாவது: சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், சமியோ கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது மகளுக்காக மாதந்தோறும் ரூ.80 ஆயிரம் கொடுத்து வருகிறார். ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு என்று ரூ.7 லட்சம் வேண்டும் என்றும், மகளுக்கு ரூ.3 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். தற்போது நீமன்றம் ஹசின் ஜஹானுக்கான சொந்த செலவுக்கு ரூ.50 ஆயிரமும், மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் ரூ.80 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×