search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில்"

    • நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
    • 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதுடன் நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும் 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது. இது மட்டுமின்றி 21 அடி நீளமுள்ள அலகு குத்தி கோவிக்கு வந்து காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் சித்திரை திருவிழா களைகட்டியது. 

    • வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஏலத்தில் 14 பேர் கலந்து கொண்டனர்.
    • இந்து சமய அற நிலையத்துறை நிர்ணயித்த தொகையை விட குறைவாக இருந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 7 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதல் உள்பட கண்மலர், முடி காணிக்கை, உணவுகூடம் ஆகியவைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஏலத்தில் 14 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் முடிகாணிக்கைக்கான ஏலத்தை மாயி என்பவர் ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். ஆனால் கண்மலர் ஏலம் எடுப்பத ற்கான ஏலத்தொகை ரூ.4 லட்சம், உணவு கூடத்தி ற்கான ஏலத்தொகை ரூ.19 லட்சம், ராட்டினம் ஏலம் எடுப்பத ற்கான ஏலத்தொகை ரூ.1 கோடியே 50 லட்சம் என ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது.

    இந்த ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரிய வர்கள் இந்து சமய அற நிலையத்துறை நிர்ணயித்த தொகையை விட குறைவாக இருந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

    ×