என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புருவங்கள் அடர்த்தியாக"
- முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு புருவங்கள்.
- விளக்கெண்ணெய் புருவங்களின் மீது பூசி மசாஜ் செய்யலாம்.
பெண்களின் முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவை புருவங்கள். பெண்களின் வில் போன்று வளைந்து இருக்கும் அவை, பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடியவை. ஆனால், தற்போது பல பெண்களுக்கு புருவ முடிகளின் வளர்ச்சி குறைவாக உள்ளது. இதன் காரணமாக செயற்கையாக 'ஐ புரோ பென்சில்' கொண்டு புருவங்களைத் தீட்டிக்கொள்கிறார்கள்.
புருவ முடிகள் சீராக வளர்ச்சி அடைந்து, புருவங்கள் அடர்த்தியாக காட்சி அளிப்பதற்கு இயற்கையான வழிகளை கடைப்பிடிக்கலாம். அதுபற்றிய சில விஷயங்கள்:
முடி வளர்ச்சிக்கு:
ஒரு சில பெண்களுக்கு புருவத்தில் ஆங்காங்கே முடிகள் இல்லாமல் திட்டுத்திட்டாக இடைவெளி இருக்கும். இவர்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் விளக்கெண்ணெய்யை புருவங்களின் மீது பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம்.
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்தும் புருவத்தில் பூசி மசாஜ் செய்யலாம்.
எண்ணெய் பூசுவதற்கு முன்பு புருவப் பகுதியை லேசாக 2 அல்லது 3 முறை கிள்ளி விடவும். இவ்வாறு செய்வதால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புருவ முடிகள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.
பொடுகு நீங்க:
புருவங்களை முறையாக பராமரிப்பது அவசிய மாகும். இல்லையென்றால், அவற் றில் பொடுகு பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தினமும் புருவங்களில் ஆலிவ் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வரலாம். இவ்வாறு செய்வதால் பொடுகு நீங்குவதோடு புருவ முடிகள் மிருதுவாகவும், வசீகரமாகவும் மாறும்.
வேக்சிங்கை தவிர்க்கவும்:
சில பெண்கள் புருவங்களை ஒழுங்கு படுத்துவதற்கு, அந்த இடத்தில் வேக்சிங் செய்வது, பிளேடு கொண்டு புருவ முடிகளை நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது சருமத்தையும், முடி வளர்ச்சியையும் பாதிக்கும். புருவத்தை சீர்படுத்த, திரெட்டிங் முறையை மட்டுமே கையாள வேண்டும். புருவத்தின் மேல்பகுதியிலுள்ள முடிகளை நீக்காமல், கீழ் பகுதியில் உள்ள முடிகளை மட்டும் நீக்கினால். அதன் வடிவம் அழகாக அமையும்.
முக வடிவத்துக்கு ஏற்ற புருவ அமைப்புகள்:
புருவங்களை ஒழுங்குபடுத்தும் போது. உங்கள் முக வடிவத்துக்கு ஏற்ற புருவ அமைப்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், புருவ முடிகளை அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் இருக்கும் வகையில் அமைத்தால் அழகாக இருக்கும். திரெட்டிங் செய்யும் போது, புருவங்கள் உயர்ந்து வளையும் வகையில் அமைத்தால் முக அழகை மேம்படுத்திக் காட்டும்.
ஓவல் வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு, கன்னத்தை விட நெற்றி சற்று அகலமாக இருக்கும். இவர்கள் மெல்லிய புருவ அமைப்பை தவிர்க்க வேண்டும். புருவங்கள் அடர்த்தியாகலாம். இருக்குமாறு அமைக்கலாம்.
இதய வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு, கூர்மையான கன்னம், பரந்த நெற்றி இருக்கும். இவர்கள் அரைவட்ட வடிவ புருவ அமைப்பை தேர்வு செய்யலாம். இது முகத்தை மேலும் அழகாகக் காட்டும்.
செவ்வக வடிவ முக அமைப்பு கொண்டவர்கள். மெல்லிய வளைவு இருக்குமாறு, புருவத்தை சீரமைக்கலாம். புருவங்கள் ஆரம்பிக்கும் இடங்களில் நேராகவும், அவை முடியும் இடங்களில் மட்டும் லேசாக வளைந்து இருக்குமாறும் செய்யலாம்.
- புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
- புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.
பொதுவாக நம்மில் பலர் நல்ல அடர்த்தியான புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு அடர்த்தியான புருவத்தை எல்லோராலும் பெற முடியாது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் தங்கள் புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.
* தேங்காய் எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
* விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.
* தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.
* கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
* முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதை காண முடியும்.
* வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்