என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஜய் முத்தையா"
- படத்தின் கதை, மதுரை மாவட்ட இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது.
- ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கிராமத்து பின்னணியில் கதைகளை உருவாக்கி சினிமா எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கும் அடுத்த புதிய படத்தின் மூலம் தனது மகன் விஜய் முத்தையாவை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் இதன் படப்படிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
'குட்டிப்புலி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. கொம்பன், மருது, கொடி வீரன், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். கிராமத்து பின்னணி கதையில் சினிமா படம் எடுத்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இதற்கான பட பூஜை விழா நடந்து உள்ளது. இந்த படத்தின் கதை, மதுரை மாவட்ட இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது. தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். பல புதுமுக நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. படத்தில் மிக முக்கிய சண்டைக்காட்சியை ஒருவாரம் படமாக்க உள்ளனர். இதற்காக பெரிய பொருட்செலவில் செட் உருவாக்கி உள்ளனர்.
இந்தப் படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்