search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரதுறை அதிகாரி"

    • அதிகாரி பழனி மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • தற்போது எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தில் முதல்வராக உள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் பழனி. இவர் தற்போது எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தில் முதல்வராக உள்ளார்.

    இவர் ரூ.1.79 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிபபு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து முகப்பேர் பகுதியில் உள்ள வி.ஜி.என். நகரில் உள்ள பழனியப்பன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கீதா ஆகியோர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். இது தொடர்பாக சுகாதார அதிகாரி பழனி மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×