search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாட்டு பூக்கள்"

    • கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான்.
    • கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

    புராண காலத்தில் "ருக்மாங்கதன்" என்ற பெயருடைய மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி செய்து வந்தான்.

    அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.

    அவனுக்குச் சொந்தமான ஒரு அழகிய நந்தவனத்தில் உலகில் உள்ள பேரழகு வாய்ந்த மலர்களை எல்லாம் வரவழைத்து அங்கே பயிர் செய்தான்.

    அதை தன் கண் போல் காத்து வளர்த்து வந்தான்.

    ஒரு சமயம், தேவேந்திரன் தனக்கு ஒரு யாகத்திற்கு பூசை செய்ய பூக்கள் வேண்டுமென்று கருதிய போது ருக்மாங்கதனின் பூந்தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு தேவ கண்ணரசனை அனுப்பி அங்கிருந்து வினோதமான பூக்களை திருடிக் கொண்டு வரச் செய்தான்.

    தினமும் பூக்கள் திருட்டுப் போவதைக் கண்ட ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.

    ஆனால் அவரால் திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

    கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான்.

    கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

    அதன் பிறகே ருக்மாங்கதன் சமரசம் அடைந்தார்.

    • சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.
    • பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

    வழிபாடுக்கு உதவும் பூக்கள் பற்றிய தகவல்கள்:

    1. சந்தனமும், பூவும் இல்லாத பூஜை பயனற்றது.

    2. சிவலிங்கத்தின் மேல் பூவோ, வில்வமோ இல்லாமல் இருக்கக் கூடாது.

    3. பூக்களை ஒரு போதும் கவிழ்த்து சார்த்தக் கூடாது.

    4.முந்தைய நாள் போட்ட புஷ்பத்தின் மீது புது புஷ்பம் சார்த்தக் கூடாது. அதைக் காலில் படாத நிலையில் களைந்த பிறகே புஷ்பம் சார்த்த வேண்டும்.

    5. தாழம்பூவில் நுனியில் லட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் உறைவதால் காம்பினை நீக்கியே பூஜையில் சமர்ப்பிக்க வேண்டும்.

    6. "அர்ஜூனா! யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் இவற்றைப் பக்தியோடு படைக்கிறாரோ அவரது தூய மனதைக் கருதி, அவர் அளிப்பவற்றை ஏற்றுக் கொள்கிறேன்" என்று பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.

    7. துர்வாச முனிவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள திரவுபதி பரந்தாமனை அழைத்தாள். அப்போது அட்சய பாத்திரத்தில் இருந்த ஒரு சிறு இலையைத் திரவுபதி சமர்ப்பிக்க, அதை உண்டு அனைவரையும் கண்ணன் காத்தார்.

    8. கஜேந்திரன் தினமும் பரந்தாமனுக்குப் புஷ்பங்களைப் பக்தியுடன் சமர்ப்பித்து வந்ததால் முதலையின் வாயில் இருந்து மீள முடிந்தது.

    ×