search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரத்வாஜ் ரங்கன்"

    • ஐரா படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார்.
    • எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார்.

    2019 ஆம் ஆண்டு நயன் தாரா மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஐரா திரைப்படம், இப்படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார். இப்படத்தில் நயன் தாரா இரு வேடங்களில் நடித்து இருதார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து , பிளட் மனி மற்றும் புர்கா திரைப்படத்தை இயக்கினார்.

    தற்பொழுது எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார். சர்ஜூன் இயக்கும் இப்படத்திற்கு பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் கதை மற்றும் திரைக்கதை எழுதவுள்ளார்.

    இப்படத்தில் நயன் தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
    • வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனெக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சில நடிகர்களுக்குதான் உண்டு. அதேப் போல் தமிழ் சினிமாவின் வெர்சாடைல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

    சமீப காலமாக இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் திரைப்படம் பெரும்பாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர் மற்றப் படங்களில் வில்லனாகவோ ,மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்.

    ஆனால் இந்த கருத்தை உடைக்கும் வகையில் இவரது 50 வது திரைப்படம் அமைந்தது. சமீபத்தில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவர் ஏன் ரொமாண்டிக் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விஜய் சேதுபதி " தரமாட்டேங்குறாங்க சார், ஆனா நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அதுக்கான கதைய தேடிட்டு தான் இருக்கேன், காதல்ல என்னைக்குமே தீர்ந்தே போகாது சார், காதல் காட்சிகள் ரொம்ப ரசிக்கிறவன் சார் நான் , கேமரா முன்னாடி நடந்தாலும் சில நொடிகளே நடந்தாலும், நான் அதை நிஜம் என்று நம்புகிறேன்., அது எல்லாதுக்கும் அமைந்துடாதுள்ள சார்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×