search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது டெய்ஃப்"

    • ஜூலை 17-ந்தேதி முகமது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
    • வான் தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், முகமது டெய்ஃப் கொல்லப்பட்டரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்திய நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    காசாவின் தெற்கு நகரான ரஃபாவைத் தவிர மற்ற நகரங்களை அடையாளம் தெரியாத அளவிற்கு இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் சின்னாபின்னமாக்கியுள்ளது.

    இதில் ஒரு நகரம்தான் கான் யூனிஸ். கான் யூனிஸ் நகரில் எங்களுடைய நோக்கம் முடிவடைந்தது என இஸ்ரேல் தெரிவித்து, இந்த நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலஸ்தீனர்கள் குடியேறலாம் என பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது.

    இதற்கிடையே பாலஸ்தீன மக்களுடன் ஹமாஸ் அமைப்பினரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

    இந்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி கான் யூனிஸ் நகரம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. முகமுது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவர் மறைந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த கூடாரங்கள் வசித்து வந்த 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் முகமது டெய்ஃப் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தவில்லை, ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை. இவர்தான் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டடார்.

    இந்த நிலையில்தான் புலனாய்வு மதிப்பீட்டின்படி வான் தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் வான்தாக்குதல் மூலம் கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளது.

    தலைவர் கொல்லப்பட்ட இரண்டு நாளில் முக்கிய தலைவர் தாக்குதலில் உயிரிழந்தார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது ஹமாஸ் அமைப்பினருக்கு போரில் அடுத்தடுத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
    • 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய 8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.

    பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து பாலஸ்தீனத்தின் காசா மற்றும் ரஃபா நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களாக நடக்கும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 38,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப் கான் யூனிஸ் பகுதியில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு இன்டலிஜென்ஸ் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

     

    இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டாரா என்று உறுதிசெய்யப்படவில்லை.

     

    தற்போது 58 வயதான 'முகமது டெய்ஃப்' என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் இப்ராஹிம் அல் மஸ்ரியை கொல்ல முயற்சித்து இஸ்ரேல் இதுவரை 7 முறை தாக்குதல் நடத்தி தோல்வியடைந்துள்ளது. நேற்று நடந்துள்ள தாக்குதல் அவர் மீதான எட்டாவது கொலை முயற்சி ஆகும். முகமது டெய்ஃப் ஐ கொல்வது இந்த போரில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக உள்ளது.

    1948 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக பெருமபாலான பாலஸ்தீன மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்குளேயே அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். அப்படி கான் யூனிஸ் நகரில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த தாய் தந்தைக்கு 1965 ஆண்டில் அகதி முகாமில் வைத்து பிறந்தவர் முகமது டெய்ஃப். காசாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்ற டெய்ஃப் 1987 வாக்கில் அப்போதைய பாலஸ்தீனிய இளைஞர்கள் பலர் செய்ததைப் போலவே தங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை எதிர்க்க உருவான ஹமாஸ் அமைப்பில் சேர்ந்தார்.

     

    தற்போதய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக இருக்கும் டெய்ஃப் ராணுவ விவகாரங்களில் திறனுடையவராக இருந்தார். 1989 இல் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின்னர் 90 களில் அமைதிப் பேசுவார்த்தையை ஏற்காமல் ஹமாஸ் தலைவர்களை படுகொலை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் பல தற்கொலை தாக்குதலைகளை திட்டமிட்டு அரங்கேற்றினார். அவர் மீதான இஸ்ரேலின் கடந்தகால தாக்குதலைகளில் தனது ஒரு ஒரு புற கண்ணை டெய்ஃப் இழந்ததாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    பல முறை படுகாயமடைந்து மீண்டுள்ளார் டெய்ஃப். சிலர் அவர் வீல் சேரில் தான் இருப்பதாக கூறுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் ரகசிய சுரங்கபாதைகள் அமைப்பது, ராக்கெட்டுகள் உருவாக்குவது, வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என ஹமாஸின் ராணுவத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் முகமது டெய்ஃப். இதன் உச்சமாகவே கடந்தஅக்டோபர் 7 தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்.

     

    முகமது டெய்ஃப் தனது 20 களில் இருந்த புகைப்படமும், சமீபத்திய புகைப்படம் ஒன்றும், தாக்குதலுக்கு பின் கிடைத்த அவரின் ஆடியோ செய்தியில் உள்ள குரல் மட்டுமே வெளியுலகிற்கு அவரைப் பற்றி கிடைத்த சொற்ப ஆதரங்களாகும். இந்நிலையில் 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய  8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.

    ×