search icon
என் மலர்tooltip icon

    பாலஸ்தீனம்

    • சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் மத்திய காசாவில் அழ- புரெஜ் [Al-Bureij] அகதி முகாம்  மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் டெய்ர் அல் பாலா பகுதியில் உள்ள நஸ்ரேத் முகாமில் உள்ள அல்- அவ்தா [Al-Awda] மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டெய்ர் அல் பாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குகளில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். நேற்று காலை மத்திய காசா மற்றும் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

    மத்திய காசா பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு மத்தியில் ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா தலைவர் கவலை தெரிவித்துள்ளார். 

     

    • மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகின்றனர்
    • கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன

    போர்

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் [அக்டொபர் 7] ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க இஸ்ரேல் போரைத் தீவிரப்படுத்தியது.

    ஆனால் இந்த போரில் உயிரிழந்த பால்ஸ்தீனியர்களின் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். காசாவில் வாழ்ந்த சுமார் 23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மனித உரிமை உதவிகள் எட்டாத துண்டிக்கப்பட்ட பிரதேசமாகக் காசா திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் வீசும் குண்டுகளை விட உணவுத் தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுமே அம்மக்களின் கொடுங்கனவாக மாறியுள்ளது. கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைப்படங்கள் காண்போர்  நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன

     

    சாலா 

    குழந்தைகள், கர்ப்பிணிகள் மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறனர். இந்த அசாதார சூழ்நிலையில் குழந்தையை பிரசவிக்கும் தாய்மார்கள் நிர்கதியில்  விடப்பட்டுள்ளனர்.

    சொந்த நாட்டில் அகதியாக மத்திய காசாவில் டெய்ர் அல் பாலாஹ்[Deir al-Balah] பகுதியில் டென்ட் முகாம் ஒன்றில் கையில் தனது ஒருமாத பெண்குழந்தை மிலானா [Milana]  - வை ஏந்தியவாறு பேசும் ராணா சாலா [Rana Salah] என்ற தாய், இவளை [குழந்தையை] இந்த போருக்கும், துன்பத்துக்கும் மத்தியில் பெற்றது என்னை குற்றவுணர்வில் தள்ளியுள்ளது. முடிவெடுக்கும் உரிமை எனக்கு இருந்திருந்தால் நான் இவளை பெற்றிருக்கவே மாட்டேன்.

     

    மிலானா 

    இதற்கு முன் நாங்கள் இது போன்றதொரு அவலம் நிறைந்த வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. நான் இந்த குழந்தைக்கு துரோகம் செய்வதாகவே உணர்கிறேன். இதை விட மேம்பட்ட சூழலில் இவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாலா வாழும் இதே டெய்ர் பகுதியில் மருத்துவமனை அருகில் இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

    அதில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். ஐநா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின்[UNICEF] அறிக்கைத் தரவுகளில் படி சாலாவின் குழந்தை மிலானா காசாவில் கடந்த ஒரு வருடத்தில் போருக்கு மத்தியில் பிறந்து அவதிப்படும் 20,000 குழந்தைகளில் ஒருவள் ஆவாள்.

     மரண வியாபாரம் 

    கணவனை இழந்து தனியே குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டுகளுக்கு பயந்து முகாம்களுக்கு முகாம் இடம்மாறி வரும் தாய்மார்கள் காசாவின் துயரத்துக்கு சாட்சிகளாக உள்ளனர். தற்கொலை எப்படி எதற்கும் தீர்வாக இருக்காதோ அதுபோல போர்களும் எதற்கும் தீர்வு கிடையாது என்பதை  ஆயுதங்களை கொண்டாடும், வியாபாரம் செய்யும் மரண வியாபாரிகள் மக்களிடம் இருந்து மறைத்து  வருகின்றனர். 'ஆயுதம் வாங்குற காசுக்கெல்லாம் அரிசி வாங்கியிருந்தா?' என்ற 'தம்பி' பட  வசனமே  தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதாக இருக்கக்கூடும்.

    • லெபனான் மீது குறிவைத்துள்ள இஸ்ரேல், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.
    • இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை குண்டுகளை வீசியது

    சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இந்நிலையில் தற்போது லெபனான் மீது குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வந்தாலும், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.

    மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் அல்-பலாஹ் நகரில் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

    இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 93 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே வடக்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தப் போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    காசா:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், ஒப்பந்த அடிப்படையில் 105 பிணைக்கைதிகளை மீட்டது. அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பிணைக்கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையே, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், காசாவில் உள்ள செய்டவுன் என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கூடம்மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பழைய பள்ளிக்கூட வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மட்டும் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

    • ஐ.நா. பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு.
    • காசாவின் தெற்குப் பகுதி, மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தாக்குதல் நின்றபாடியில்லை.

    இந்த நிலையில் நேற்றிரவு காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐ.நா. நடத்தி வரும் பள்ளிக்கூடம் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பெண்கள், குழந்தைகள் உள்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆக்கிரமிப்பு மேற்கு கரை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதுடன் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு வான்தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த பயங்கரவாதிகள் என இஸ்ரேல் தெரிவித்தள்ளது. கார் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஐ.நா. பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள், பெண் ஒருவர் அடங்குவார்கள். 18 பேர் காயம் அடைந்தனர்.

    பள்ளிக்கூடத்திற்கு உள்ளே இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அது உண்மையான தகவலா என்று தெரியவில்லை.

    இஸ்ரேல் தாக்குதல் மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுங்கள் என்ற உத்தரவால் காசாவில் உள்ள ஐ.நா. பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் உள்ள 90 சதவீதம் பள்ளிகள் இஸ்ரேல் தாக்குதலில் சேதம் அடைந்துள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41,084 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 95,029 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    புதன்கிழமை அதிகாலையில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆறு பேர் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆவார்கள். செவ்வாய்க்கிழமை இரவு ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

    • சிலர் செல்போன் ஒளியில் மணலை தோண்டுவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி மணலில் புதைந்தவர்களை மீட்டனர்.
    • மனிதாபிமான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனுஸ் நகர் அருகே அல்-மவாசி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 40 பேர் பலியானார்கள். 60 பேர் காயம் அடைந்தனர்.



    தாக்குதல் நடந்த இடத்தில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டு அதில் இடிபாடுகள், மணல் மூடின. மீட்புப் பணியாளர்கள் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி மணலை மாற்றினர்.

    சிலர் செல்போன் ஒளியில் மணலை தோண்டுவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி மணலில் புதைந்தவர்களை மீட்டனர்.

    மனிதாபிமான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மனிதாபிமான பகுதியில் ஹமாஸ் அமைப்பி னர் பதுங்கி இருந்ததாகவும் அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    • காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது.
    • ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

    போரும் பிணைக் கைதிகளும் 

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 மரணித்தனர். மேலும் 250 க்கும் மேற்பட்டடோர் பிணைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.

    அவர்களை மீட்கும் முகமாகவும், தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்துடனும் கடந்த 10 மாதங்களாக காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் அதிகமானபாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் பிணைக்கைதிகளாக இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதன்பின் பிணைக்கைதிகள் பரிமாற்றத்தில் இதுவரை உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

     

    மீட்பு 

    சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார். தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாகக் கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த படுகொலைக்காக ஹமாஸுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் இஸ்ரேலிய மக்கள் நேதன்யாகு வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    ஹமாஸ் 

    தற்போது ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் ஆயுதக் குழு [எசேதைன் அல் காசம் பிரிகேட்] செய்தி தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளதாவது,'பிணைக்கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகளுக்கு, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். ஒப்பந்தத்துக்கு முன் வராமல் நேதன்யாகு ராணுவத்தின் மூலம் அழுத்தம் கொடுப்பதைத் தொடர்ந்தால் பிணைக் கைதிகளை சவப்பெட்டிகளுக்குள் வைத்துத்தான் இஸ்ரேலுக்கு அனுப்புவோம் என்று ஹமாஸ் சார்பில் தெரிவித்துள்ளார்.

    • இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
    • நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

    பாலஸ்தீன நகரங்களின்மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். தொடர் போரால் காசா நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களும் சுகாதார சேவைகளும் கிடைக்காமல் தோற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. இதனை முன்னிட்டு இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு  தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன.

     

    அந்த வகையில், நேற்றைய தினம் நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், நேற்றய தினம் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் சொட்டு மருந்து முகாம்களுக்கு தயாரான நிலையில், காசா பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காசாவில் நேற்று அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

    • ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறலாம் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
    • பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா பகுதியில் அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறலாம் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

    போர் இடைநிறுத்தங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    • ஜெனின் மற்றும் துல்காரெம் நகரில் சோதனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல், மேற்கொண்டு ஏதும் தெரிவிக்கவில்லை.
    • காசாவில் போர் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசாவின் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. காசாவின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று திடீரென மேற்குக் கரை மூழுவதும் பலத்த சோதனையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சோதனையின்போது 9 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜெனின் நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதில் இருந்து தினந்தோறும் என்ற அடிப்படையில் இஸ்ரேல் சோதனை மேற்கொண்டு வருகிறது.

    இந்த சோதனையின்போது அங்குள்ள போராளிக் குழுக்கள் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெனின் நகர் ஆளுநர், கமல் அபு அல்-ரப் மருத்துவமனைகளுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் பாதைகளை இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஜெனின் மற்றும் துல்காரெம் நகரில் சோதனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல், மேற்கொண்டு ஏதும் தெரிவிக்கவில்லை.

    காசாவில் போர் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் அடிக்கடி துப்பாக்கிச் சண்டையை தூண்டும் இத்தகைய தாக்குதல்களின் போது பெரும்பாலானோர் இறந்துள்ளனர்.

    • 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    தூக்கத்தில் பிரிந்த உயிர்கள் 

    பாலஸ்தீன நாட்டின் மத்திய காசாவில் உள்ள ஸவாடியா Zawayda பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் . உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

    நேற்று இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இஸ்ரேலின் 3 மிசைல்கள் அந்த வீட்டின் மீது ஏவப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் ஹமாஸ் செயல்பாடு இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மத்திய காசாவில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் நிர்ப்பந்தித்து வருகிறது.

     

    அமைதிப் பேச்சுவார்த்தை 

    இதற்கிடையில் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேசுவார்த்தை நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டகாக தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்துள்ளது.

    வெற்றியா? தோல்வியா? 

    ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மத்தியஸ்தர்களின் முயற்சியைப் பாராட்டுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் நிராகரிக்கிறோம் என்றும், போர் நிறுத்தம் வெற்றி அடையவுள்ளது போன்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்படுவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

     

    மத்திய காசா- தெற்கு லெபனான் தாக்குதல்கள் 

    தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் காசாவில் நேற்று இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்றைய தினம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த தாக்குதலில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பெய்ரூட்:

    காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டோரை இன்னும் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், தெற்கு லெபனானின் நபாட்டி பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதகாவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    ×