search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாயுப்பிடிப்பு"

    • வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
    • தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

    நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.

    வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம்.

    மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவை பரவும். உதாரணமாகத் தோள்பட்டை, கை, முதுகுத் தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடைப் பகுதிக்கு வலி பரவும். குறிப்பிட்ட ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அப்படியல்ல. வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

    வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.

    நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.

    இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும்.

    நெஞ்சுப்பகுதியின் நடுப்பகுதியில் வரக்கூடிய வலி இதயத்தில் ஏற்படும் வலியாக இருக்கும். இடது பக்கம் வரக்கூடிய வலி பெரும்பாலும் வாயுப்பிடிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் இதயத்துக்கும், இரைப்பைக்கும் இடையில் டயாப்ரம் என்ற ஒரு சவ்வு தான் இருக்கும். இது நாம் இரவு நேரம் கடந்து சாப்பிடும் போதோ அல்லது நிறையை தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது வயிறு நிறைய சாப்பிடும் போதோ இந்தமாதிரி வாயுப்பிடிப்பு ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாத போது கூட வாயுப்பிடிப்பு ஏற்படும்.

    இதற்கு சிறந்த வழி என்னவென்றால் ஆரோக்கியமான சாப்பாடு, அளவான தண்ணீர் தான். இந்த வாயுப்பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் இரவு சாப்பாடு 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் அளவான தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், வயுறு முட்ட நீர் அருந்தக்கூடாது. இவ்வாறு செய்தால் மட்டுமே வாயுப்பிடிப்பை தவிர்க்க முடியும்.

    ×