search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்போ செந்தில்"

    • சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    மொட்டை கிருஷ்ணனுடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    • மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகள் அவருடன் பேசுவதற்காக பிரத்யேக செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும், கூட்டாளியின் பிரத்யேக செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் சம்போ செந்தில், அவர்களின் சொந்த மொபைல் மூலம் விரும்பும் நபருக்கு போன் செய்து லவுடு ஸ்பீக்கரில் பேசுவதும் தெரிய வந்தது.

    இப்படி பேசினால் சம்போ செந்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார் என்ற விவரங்களை பெற இயலாது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    வி.பி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே தனது கூட்டாளிகளுடன் சம்போ செந்தில் பேசி வருவதும் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

    தினந்தோறும் மதிய வேலைக்கு பிறகே கூட்டாளிகளுடன் பேசி வரும் சம்போ செந்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்றாற்போல் சம்போ செந்தில் பேசுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராம், டெலிகிராம் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

    ×