search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி"

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கி வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.

    கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணாக அவர் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் எப்போதும் உயர்ந்த ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை பராமரித்து வருகிறது. இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×