search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிருதி இராணி"

    • 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.
    • 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானி, கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதன்பின் மத்திய அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.

    இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.

    டிவி சீரியல் மூலம் பிரபலமாகி அரசியலில் நுழைந்த ஸ்மிருதி இராணி, சமீபத்தில் 'அனுபாமா' என்ற டிவி சீரியல் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, அவர் மீண்டும் இந்தி டி.வி. சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது

    இந்நிலையில், சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்களுக்கு பாஜக முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • வித்தியாசமான அரசியலை வெளிப்படுத்துகின்றன என்று தவறாகக் கருதி விடக்கூடாது.
    • கோவில் பயணங்களால் ராகுல் காந்திக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

    பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி "வெற்றியை" அனுபவித்துவிட்டதாக நம்புவதாகவும், இப்போது அரசியலில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி சமீபத்திய போட்காஸ்ட்-இல் பேசும் போது, "அவர் (ராகுல் காந்தி) ஜாதியைப் பற்றி பேசும்போது, பாராளுமன்றத்தில் வெள்ளை டி-சர்ட் அணிந்தால், இளைஞர்களுக்கு அது என்ன மாதிரியான செய்தியை அனுப்புகிறது என்பதை அவர் நன்கு அறிவார்," என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பிட்ட மக்கள்தொகையை குறிவைத்து ராகுல் காந்தி நகர்வுகளை கணக்கிட்டு தான் மேற்கொள்கிறார். அவரது செயல்கள் நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அல்லது முதிர்ச்சியற்றதாகவோ தெரிந்தாலும்-அவை வித்தியாசமான அரசியலைத் தான் வெளிப்படுத்துகின்றன என்று நாம் தவறாகக் கருதி விடக்கூடாது."

    "கோவில் பயணங்களால் ராகுல் காந்திக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இது கேலிக்கூத்தாகவே மாறியது. சிலர் அவரது நடவடிக்கையை ஏமாற்றுவதாகத் தான் பார்த்தனர். இந்த உத்தி பலனளிக்காததால், சாதியப் பிரச்சினைகளை வைத்து ஆதாயம் தேட நினைக்கின்றனர்," என்றார்.

    ×