search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker Jagadeep Thankar"

    • பாராளுமன்றத்தில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தினர்.
    • இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா?

    நேற்று பாராளுமன்றத்தில் நுழைந்த திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மாநிலங்களை சபாநாயகர் ஜெகதீப் தன்கருக்கு எம்.பி எம்.எம்.அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "பாராளுமன்றவளாகத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்னிடம் நடந்து கொண்ட வேதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னர் பாராளுமன்ற பாதுகாப்பு படையினர் இருக்கும் பொழுது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வேலைகள் இல்லாமல் வேறு வேலைகளுக்காக கூட பாராளும்னறத்தில் நுழைய உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் திமுக எம்.பி பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு படை (CISF) வீரர்களால் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா? மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் பாராளுமன்றம் செல்கிறீர்கள் எனக் கேட்டது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்தாண்டு மே மாதம் பாராளுமன்ற பாதுகாப்பது பணியை பாராளுமன்ற பாதுகாப்பு படையிடமிருந்து மத்திய பாதுகாப்பு (CISF) படைக்கு மாற்றியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    ×