என் மலர்
நீங்கள் தேடியது "suriya"
- கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.
இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'கருப்பு' படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
- ‘சூர்யா46’ அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
- ‘சூர்யா47’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.
இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது.
'சூர்யா47' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா, நஸ்ரியா இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சூர்யா நடிப்பில் அடுத்தாண்டு இந்த 3 படங்களும் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று படங்களும் வெவ்வேறு மொழி இயக்குநர்களுடன் மூன்று வெவ்வேறு கதையம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
- சமந்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம்.
நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் கலக்கியது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் சமந்தாவிற்கு நல்ல திருப்புமுனையாகவும் அமைந்தது.
அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
- யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
- சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இப்படத்தில் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், 'அஞ்சான்' படம் வருகிற 28-ந்தேதி முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. தற்போது ரீ எடிட் செய்து தயாராகி உள்ள 'அஞ்சான்' படத்தின் ப்ரிவ்யூ ஷோ நடந்தது. இந்த ப்ரிவ்யூ ஷோவில் சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் கலந்து கொண்டார். அவருடன் இயக்குநர் சரணும் ரீ எடிட் செய்த படத்தை பார்த்துள்ளார்.
இதையடுத்து இயக்குநர் லிங்குசாமியை இருவரும் பாராட்டியுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
- இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
- படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.
விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ் கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். அதில் பேசிய நடிகர்கள் பழைய நினைவுகளை கூறி விழாவை கலகலப்பாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
- சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், 'சூர்யா47' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முதலாக சூர்யாவும், நஸ்ரியாவும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- விஜய் சாருக்கு இயற்கையாகவே ஒரு திறமை இருக்கிறது.
- எந்த நேரத்திலும் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ள மாட்டார்.
'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில் அஜித், சூர்யா காதல் குறித்து ரமேஷ்கண்ணா பேசிய சுவாரஸ்ய கருத்துக்கள் விழாவை கலகலப்பாக்கியது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து ரமேஷ் கண்ணா கூறுகையில், விஜய் சாருக்கு இயற்கையாகவே ஒரு திறமை இருக்கிறது. அவர் டப்பிங் செய்யச் செல்லும்போது, வசன பேப்பரை ஒரு முறை பார்த்துவிட்டு ஒரே டேக்கில் சொல்லிவிடுவார்.
சிவாஜி கணேசன் சாருக்கு பிறகு, அவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும். படப்பிடிப்பு தளத்தில் கூட, விஜய் மிகவும் அமைதியாக இருப்பார். ஷாட் வரும்போது, அதை ஒரே டேக்கில் முடித்துவிடுவார்.
அவர் மிகவும் நட்பானவர், பணிவானவர், எந்த நேரத்திலும் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ள மாட்டார் என்று கூறினார்.
- ‘ப்ரண்ட்ஸ்’ படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது.
- சினிமாவில் இருக்கிறவர்கள் யாரையும் ‘லவ்’ பண்ண வேண்டாம்’ என அஜித்திடம் கூறினேன்.
விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ்கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம் பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில் இயக்குநர் பேரரசு, ரமேஷ்கண்ணா, இ.வி.கணேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ரமேஷ்கண்ணா பேசியதாவது:-
படப்பிடிப்பில் சூர்யாவும், நானும் ரொம்பவும் சகஜமாக பழகிக் கொண்டிருப்போம். சந்தோசமான விசயம் என்னவென்றால் உடுமலை பேட்டையில் 'ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பு, தெனாலி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறும். நான் அந்த படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன்.
இரவு காரில் புறப்பட்டு 'ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பில் இருந்து தெனாலி படப்பிடிப்புக்கு செல்வேன். அப்படி தெனாலி படப்பிடிப்புக்கு நான் போகும் போது சூர்யா, 'என்னிடம் ஜோதிகாவை கேட்டதாக சொல்லுங்க' என சொல்ல சொல்வார். நான் அங்கு போய் ஜோதிகாவிடம் 'சூர்யா உங்களை கேட்டதாக சொல்ல சொன்னார்' என சொல்வேன். அதுபோல் அங்கிருந்து புறப்படும் போது ஜோதிகா, 'என்னை பற்றி சூர்யாவிடம் சொல்லுங்கள் என சொல்வார்'. அதை நான் சூர்யாவிடம் சொல்வேன். அப்படி காதலை வளர்த்த ஒரு படம் 'ப்ரண்ட்ஸ்'.
அதுபோல் அமர்க்களம் படப்பிடிப்பில் அஜித்திடம், 'சினிமாவில் இருக்கிறவர்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டாம். குடும்ப பெண்ணை பார்த்து திருமணம் செய்யுங்கள்' என கூறினேன். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை இயக்குனர் சரண் 'மானிட்டரில்' பார்த்துக் கொண்டிருந்தார். இதையடுத்து என்னை 'இங்க வாங்க' என கூப்பிட்டார். நானும் அவரிடம் சென்றேன். என்னிடம் 'சரண், இருவரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க' என கேட்டார். அஜித்துக்கு சில அறிவுரைகள் சொன்னேன்' என அவரிடம் கூறினேன். என்ன அறிவுரை என கேட்டார். சினிமாவில் இருக்கிறவர்கள் யாரையும் 'லவ்' பண்ண வேண்டாம்' என அஜித்திடம் கூறினேன்.
இதை கேட்ட சரண், 'அடப்பாவி, அஜித்தும், ஷாலினியும் காதலித்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் திருமணம்' என சொன்னார். உனக்கு இந்த படம் வேணுமா? வேண்டாமா? இதோடு விட்டுறு' என சொன்னார். அதோடு வாயை பொத்திக் கொண்டு வந்து விட்டேன் என சொல்லி சிரித்தார் ரமேஷ் கண்ணா.
அஜித், சூர்யா காதல் குறித்து ரமேஷ் கண்ணா பேசிய சுவாரஸ்ய கருத்துக்கள் விழாவை கலகலப்பாக்கியது.
- சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
- மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனிடையே, சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதனால் சூர்யா 47 படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ‘கருப்பு’ படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
- ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா உடன் த்ரிஷா, நட்டி, சுவாஷிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். 'கருப்பு' படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'ழகரம்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் தொடங்கியுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் படக்குழுவால் தீபாவளுக்கி வெளியிட முடியவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அன்று விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பதால். படக்குழு பொங்கலுக்கும் வெளியிடாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






