என் மலர்
முகப்பு » Go Back Modi
நீங்கள் தேடியது "Go Back Modi"
- பிரதமர் மோடி இனிமேல் தமிழ்நாட்டிக்கரு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று உதயநிதி தெரிவித்தார்.
- "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு பேசிய துணை முதல்வர் உதயநிதி, "முன்பெல்லாம் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் Go Back Modi என்று தான் சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நிதி தராத பிரதமர் மோடி இனிமேல் இங்கு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கரூரில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி திமுகவினர் #GetOutModi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
#GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 2 ஆவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.
பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை என துரை வைகோ கூறியுள்ளார்.
சென்னை:
பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ கோஷம் டிரெண்டிங் ஆகும். ம.தி.மு.க. ஆவேசமாக இந்த குரலை கையில் எடுக்கும். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்தது பற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலைதூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சினைகளும் தலைதூக்கி நின்றன.
ஆனால் இந்த முறை தமிழக மக்கள் நலனுக்காக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். முழுக்க முழுக்க தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். இந்த சூழ்நிலையில் ‘கோ பேக் மோடி’ என்பது நியாயமல்ல. முறையல்ல.
அமித் ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும், ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே தேர்தல் வரும் போதுதான் பார்க்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, கொலைகள் அதிகரித்து விட்டது என்பது சரியல்ல. கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள்.
பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை.
மோடி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அவர் அரசியல் செய்யவில்லை. அண்ணாமலைதான் அவதூறு பரப்புகிறார். அவரது பெயரையே நான் அவதூறு அண்ணாமலை என்றுதான் கூறுவேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ கோஷம் டிரெண்டிங் ஆகும். ம.தி.மு.க. ஆவேசமாக இந்த குரலை கையில் எடுக்கும். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்தது பற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலைதூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சினைகளும் தலைதூக்கி நின்றன.
ஆனால் இந்த முறை தமிழக மக்கள் நலனுக்காக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். முழுக்க முழுக்க தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். இந்த சூழ்நிலையில் ‘கோ பேக் மோடி’ என்பது நியாயமல்ல. முறையல்ல.
அமித் ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும், ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே தேர்தல் வரும் போதுதான் பார்க்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, கொலைகள் அதிகரித்து விட்டது என்பது சரியல்ல. கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள்.
பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை.
மோடி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அவர் அரசியல் செய்யவில்லை. அண்ணாமலைதான் அவதூறு பரப்புகிறார். அவரது பெயரையே நான் அவதூறு அண்ணாமலை என்றுதான் கூறுவேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
முன்னதாக ம.தி.மு.க. அலுவலகத்தில் தலைமை கழக செயலாளருக்கான அறை திறப்பு விழா நடந்தது. கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்ல கண்ணு திறந்து வைத்தார். அவருக்கு துரைவைகோ ஆளுயரமாலை அணிவித்தார். அதே போல் துரைவைகோவுக்கு ஆளுயர மாலை அணிவித்து நல்லகண்ணு வாழ்த்தினார்.
×
X