search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists prohibited"

    • மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
    • கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

    அதன்படி மாஞ்சோலை பகுதியில் சூழல் சுற்றுலா சேவையை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும்வரை சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு வர வேண்டாம் எனவும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா அறிவித்துள்ளார்.

    களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியை ஒட்டி கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தலையணையிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×