search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Y. S.R. Congress"

    • கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • அமலாக்கத் துறை உதவியுடன் விசாரணை நடத்தப்படும்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்பட்ட மது கொள்கை குறித்த வெள்ளை அறிக்கையை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிமுகப்படுத்திய மது கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் ஏதும் இன்றி பணமாக மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.

    கஜானாவுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியதற்காக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் . ஜெகன் மோகன் ரெட்டியின் மதுபான கொள்கைக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிடும் .மேலும் அமலாக்க துறை உதவியுடனும் விசாரணை நடத்தப்படும்.

    போலி மது குடித்ததால் எத்தனை பேர் கடுமையான உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையிடம் இருந்து கேட்கப்படும்.

    கடந்த ஆட்சியில் பிரபல பீர் வகைகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. உள்ளூர் வகைப்பீர்கள் அதை அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சந்திரபாபு நாயுடுவின் இந்த திடீர் குற்றச்சாட்டால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×