search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    உடல்நலக் குறைவால் பெர்லின் ஓபன் காலிறுதியில் வெளியேறிய ரிபாகினா
    X

    உடல்நலக் குறைவால் பெர்லின் ஓபன் காலிறுதியில் வெளியேறிய ரிபாகினா

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அசரென்கா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டில் அசரென்கா 3-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது ரிபாகினாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ரிபாகினா போட்டியில் இருந்து விலகினார். இதனால் அசரென்கா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    Next Story
    ×