search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இத்தாலி ஓபன் டென்னிஸ்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    இத்தாலி ஓபன் டென்னிஸ்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.

    Next Story
    ×