search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பூர்வ ஜென்ம வினைப்பயன் குறைய வேண்டுமா?
    X

    பூர்வ ஜென்ம வினைப்பயன் குறைய வேண்டுமா?

    • தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள்.
    • அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.

    வறுமை நீங்க வேண்டுமா?

    பிரதி வெள்ளிக்கிழமைகளில் வாசனை மலர்களால் தொடர்ந்து எட்டு வாரங்கள் அர்ச்சனை செய்துவர வறுமை நீங்கும் வாய்ப்பு கூடும்.

    இல்லத்தில் பூஜை செய்பவரானால் வெல்லம் பருப்பு சேர்த்த பாயசம், உளுந்து வடை செய்து நிவேதிக்கலாம்.

    விருப்பங்கள் நிறைவேற வேண்டுமா?

    தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள். அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.

    ஒரு அஷ்டமி பூஜை மட்டும் உன்னதத்தை கொடுக்காது என்பதை அறியவும்.

    பூர்வ ஜென்ம வினைப்பயன் குறைய வேண்டுமா?

    செவ்வாய்க்கிழமை வரும் அஷ்டமி நாளில் விரதம் அனுஷ்டித்து மாலை நேரத்தில் பூஜைகள் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

    மறுநாள் காலை உணவு உட்கொண்டு விரதம் முடிக்க வேண்டும். நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுதல் கூடுதல் சுபம் கொடுக்கும்.

    கோள்களின் தாக்கம் குறைய வேண்டுமா?

    தயிர் அன்னம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். தொடர்ந்து அஷ்டமி நாளில் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

    Next Story
    ×