search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராஜகோபுரம்   இல்லாத   நிலை
    X

    ராஜகோபுரம் இல்லாத நிலை

    • ஆனால் என்ன காரணத்தினாலோ ராஜகோபுரத்தை கட்ட இயலவில்லை.
    • இதனால் திருப்பணி செய்பவர்களும் இந்த ராஜகோபுரத்தை கட்டும் முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    ஆலயங்களின் கம்பீரத்துக்கு அழகு சேர்ப்பது ராஜகோபுரம்தான்.

    ஆனால் ராமகிரி காலபைவரர் ஆலயத்தில் ராஜகோபுரம் இல்லை.

    இந்த ஆலயம் உருவான கால கட்டத்தில் எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்தனர்.

    சங்கமகுல விரூபாட்சராயன் என்ற மன்னன் இந்த ஆலயத்துக்கு கோபுரம் கட்ட ஆசைப்பட்டான்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்தான்.

    கோபுரம் கட்டுவதற்கான கருங்கற்கள் கொண்டு வரப்பட்டன. ராஜகோபுரம் கட்டும் பணியையும் அவன் தொடங்கி விட்டான்.

    இந்த நிலையில் புருஷோத்த கஜபதி என்ற மன்னன் திடீரென அவன் மீது படையெடுத்து வந்தான்.

    இதன் காரணமாக ராமகிரி ஆலயத்தின் ராஜகோபுரம் கட்டும் பணி தடைப்பட்டது.

    அதன் பிறகு வந்த பலர் அந்த கோபுரத்தை சீரமைத்து கட்ட முயற்சிகள் செய்தனர். ஆனால் யாராலும் முடியவில்லை.

    ஆந்திர மாநில அரசின் தொல்பொருள் கட்டுப்பாட்டில் இந்த ஆலயம் வந்த பிறகு ராஜகோபுரத்தை கட்ட திட்டமிடப்பட்டது.

    ஆனால் என்ன காரணத்தினாலோ ராஜகோபுரத்தை கட்ட இயலவில்லை.

    இதனால் திருப்பணி செய்பவர்களும் இந்த ராஜகோபுரத்தை கட்டும் முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    Next Story
    ×