search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சக்கரத்தாழ்வார் சிறப்பு
    X

    சக்கரத்தாழ்வார் சிறப்பு

    • திருவாழி ஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.
    • ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.

    திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் இருப்பதைப் பார்த்திருப்போம்.

    ஆனால் அந்த சக்கரம் யாரு? ன்னு நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.

    அந்த சக்கரம் யாரு ?அதன் மகிமை என்ன? என்பதைப் பற்றி இந்த பதிவில் அடியேன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    பக்தில பல வகை உண்டு.

    நமக்கு தெரிந்த ஆன்மீகக் கருத்துக்களை நாலு பேர் தெரிந்து கொள்ளுவது ஒரு வகையான பக்தி என்று சொல்லலாம்.

    அடியேனும் அந்த வகைதான்.

    அடியேன் பதிவின் மூலமாக பயன்பெறுகிறார்கள் என்பது அடியேன் சுவாமிக்கு செய்யும் கைங்கரியம் எண்ணி இந்த பதிவு

    சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்

    சக்கரத்தாழ்வார்,

    சுதர்சனர்,

    சக்கரராஜன்,

    நேமி,

    திகிரி,

    ரதாங்கம்,

    சுதர்சனாழ்வான்,

    திருவாழி ஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.

    மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோவில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார்.

    'சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.

    திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், வாகனமான கருடனை

    கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின்

    பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழி ஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ

    சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.

    Next Story
    ×