என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![சிவபெருமான் வயிற்றில் பலகாலம் இருந்த சுக்கிரன் - சுக்கிர பகவான் கதை சிவபெருமான் வயிற்றில் பலகாலம் இருந்த சுக்கிரன் - சுக்கிர பகவான் கதை](https://media.maalaimalar.com/h-upload/2024/05/15/2227461-06.webp)
சிவபெருமான் வயிற்றில் பலகாலம் இருந்த சுக்கிரன் - சுக்கிர பகவான் கதை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.
- பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.
நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.
பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.
அதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.
அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குல குருவாக கொண்டனர்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச் சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.
இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
தேவர்கள் அனைவரும் சென்று சிவ பெருமானிடம் முறையிட்டனர்.
தான் கொடுத்த வர பலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கி விட்டார்.
பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் சுக்கிரன் என்றும்,
தூய வெண்மையாக வந்ததனால் வெள்ளி என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.