search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தன்னை கடவுளாக கருதி வணங்க ஆணையிட்ட இரண்ய கசிபு
    X

    தன்னை கடவுளாக கருதி வணங்க ஆணையிட்ட இரண்ய கசிபு

    • இந்த ஆணவத்தால் தானே இறைவனாகக் கருதித் தன்னை வணங்க ஆணையிட்டான்.
    • இறுதியில் தங்கள் துயரத்திற்கு முடிவு கட்டுபவர் திருமாலே என்று முடிவு செய்து அவரிடம் தங்கள் குறையினைத் தெரிவித்தனர்.

    இறவா வரம் பெற்றமையால் தன்னை இறைவனாகவே கருதி அனைவரையும் அடக்கியாள முற்பட்டான். மானுடர்கள், தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் அவன் அதிகாரத்திற்கு அஞ்சினர்.

    இந்த ஆணவத்தால் தானே இறைவனாகக் கருதித் தன்னை வணங்க ஆணையிட்டான்.

    இறைவன் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது என்றும், அதற்குப் பதில் தன்னுடைய பெயரான "இரண்யாய நம" என்பதையே சொல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.

    இறைவனிடம் வரம் வாங்கி மேனிலை அடைந்தவன் அந்த இறைவனின் பெயரைக்கூட சொல்லக்கூடாது என்று ஆணையிடுகிறானே என்று வருந்தினர்.

    இறுதியில் தங்கள் துயரத்திற்கு முடிவு கட்டுபவர் திருமாலே என்று முடிவு செய்து அவரிடம் தங்கள் குறையினைத் தெரிவித்தனர்.

    திருமாலும், அவர்களை நோக்கி வருத்தம் வேண்டாம். இரண்யனுக்குப் பிறக்கும் அவன் மகன் என் தீவிர பக்தனாவான்.

    அவன் மூலமே அவனுக்கு மரணம் சம்பவிக்கும். தகுந்த நேரத்தில் நான் அவனை சம்ஹாரம் செய்வேன் என்றார்.

    அவர்களும் ஆறுதலடைந்து திரும்பிச் சென்றார்கள்.

    Next Story
    ×