கோவில்கள்
null

அதிசய ஆலயங்கள்..!

Published On 2024-06-22 10:45 GMT   |   Update On 2024-06-22 10:45 GMT
  • மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.
  • வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்

திருவண்ணாமலை கோவில்: திருவண்ணாமலை சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.


மதுரை மீனாட்சியம்மன் கோவில்: வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில்: இந்த கோவில் கும்பகோணம் அருகே உள்ளது. இந்த கோவிலில் தயாரிக்கும் எந்த நைவேத்தியப் பண்டங்களிலும் உப்பு சேர்ப்பதில்லை.


ராமநாத சுவாமி கோவில்: இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவில்: சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மூலவரே வீதிவலம் வருவம். மேலும் இந்த கோவிலின் அதிசயம் என்னவென்றால் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம். அதுபோல் சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்.


தக்கலை சிவன் கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் ஒன்று இருக்கிறது. ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி சக்தி அதற்கு உண்டு. இந்த சிலை சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது.

திருக்கோவிலூர் கோவில்: விழுப்புரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் தான் எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்படும். ஆனால் இங்கு மட்டும் தான் வலது கையில் சங்கு இருக்கும்.


பத்ரிநாத்: இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். இங்கு மே மாதம் முதல் வாரம் நடை திறந்து நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவர். அந்த தீபம் மீண்டும் கோவில் மீண்டும் திறக்கப்படும் வரை அதாவது, ஆறுமாதம் வரை எரிந்துகொண்டே இருக்கும்.

சமயபுரம்: சமயபுரத்திலுள்ள ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் இருக்கும். அதுவும் மிகப் பெரிய அளவில் இருக்கும். இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இது சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.


திருநீர்குகை: இந்த குகை தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் உள்ளது. இந்த குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இதனால் தான் இந்த குகைக்கு திருநீர்குகை என்று பெயர் வந்தது. மேலும் கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை ஆகிய திருத்தலங்களிலும் திருநீறு தானாகவே விளையும்.

ரத்னகிரி மலை: இந்த மலையில் உள்ள முருகனுக்கு பால் கொண்டு அபிஷேகம் செய்த சிறிது நேரத்திலேயே அது தயிராக மாறிவிடும்.

சென்னிமலை முருகன்: இம்மலையில் உள்ள முருகனுக்கு தயிர் கொண்டு அபிஷேகம் செய்யும் போது அது புளிப்பதில்லை.


வேலப்பர் கோவில்: தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள இந்த கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவிலின் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கும்.

ஏகாம்பரநாதர் கோவில்: காஞ்சி அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் சந்நிதி இல்லை.

காசியில் பல்லிகள் இருந்தாலும் அவைகள் ஒலிக்காது. மேலும் இந்நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறக்காது.

குளித்தலை, மணப்பாறை வழியில் ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலையின் மேல் காகங்கள் பறக்கவே பறக்காது.

நவக்கிரகப் பிரதிஷ்டை கோவில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

ஆழ்வார்குறிச்சியில் உள்ள நடராஜர் சிலை ஒரே கல்லினால் கட்டப்பட்டது. அதை தட்டினால் வெண்கல ஓசை அதிலிருந்து வரும்.

Tags:    

Similar News