உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட மாரிமுத்துவின் உடல்.

சவூதி அரேபியாவில் இறந்தவர் உடல் நாகக்குடி வந்தது-ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நடவடிக்கை

Published On 2023-02-08 09:47 GMT   |   Update On 2023-02-08 09:47 GMT
  • உடல்நலக் குறைவு ஏற்பட்டு ரியாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
  • கடந்த ஜனவரி 11-ந்தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

சுவாமிமலை:

சுவாமிமலையை அடுத்த நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54). கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ரியாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி 11-ந்தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

தனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமா, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

இதையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் மனிதநேய மக்கள் கட்சியின் அயலக பிரிவான இந்தியன் வெல்பேர் போரம் அமைப்பின் சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முஹம்மது மேற்பார்வையில் ரியாத் மண்டல சமூகநலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா, சமூக நலத்துறை இணைச் செயலாளர் அறந்தை சித்திக் மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாகீர் பேக் ஆகியோர் மாரிமுத்து வேலை செய்த நிறுவனம் மற்றும் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான பணிகளை முடித்து மாரிமுத்து உடலை சவூதி அரேபியா ரியாத்திலிருந்து மும்பை வழியாக சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.

சென்னை வந்த மாரிமுத்துவின் உடலை அவரது மகன் கேசவன் மற்றும் அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் மூலமாக மாரிமுத்து உடலை நாகக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்து அவர் குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்தனர்.

இறுதிச் சடங்கு நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, பாபநாசம் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் முஹம்மது ரிபாயி, சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி, முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News