உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கண் பரிசோதனை முகாம்

Published On 2022-11-07 07:52 GMT   |   Update On 2022-11-07 07:52 GMT
  • கண்புரை, குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
  • கண் அறுவை சிகிச்சைக்காக 142 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுக்கூர் அரிமா சங்கம், மதுரை கண் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

இதில் கண்புரை, சக்கரை நோய், , குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முகாமில் 398 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை கண் அரவிந்த் மருத்துவமனைக்கு 142 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து, கண் குறை அறுவை சிகிச்சை என எல்லாமே இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இதில் அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News