உள்ளூர் செய்திகள்

மல்லிகார்ஜுன துர்கம் மலைகோவில் தேர் திருவிழா

Published On 2023-03-05 09:46 GMT   |   Update On 2023-03-05 09:46 GMT
  • மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிரமராம்மா தேவி, மல்லிகார் ஜுன துர்கம் மலைகோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.

இதனையடுத்து தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.

விழாவில் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி முரளி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் நாகராஜ், குமரன் அகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

விழாவில் கோவில் திருவிழா கமிட்டியினர், அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, காரண்டப்பள்ளி பஞ்சாயத்து ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News